Skip to main content

தமிழகத்திற்கு ரூபாய் 533.2 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு!

Published on 09/05/2021 | Edited on 09/05/2021

 

union government fund released 25 states including tamilnadu

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன், வெண்டிலேட்டர், உள்ளிட்டவையை மத்திய அரசு தொடர்ந்து அனுப்பி வைத்து வருகிறது. அதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் ஆக்சிஜன் டேங்கர்கள், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு விமானங்கள் மூலம் அனுப்பி வருகின்றன.

 

union government fund released 25 states including tamilnadu

 

இந்த நிலையில், கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு 15- வது நிதிக் குழுவின் பரிந்துரையின் படி, 25 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்டமாக  ரூபாய் 8,923.8 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், எந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 1,441.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா- ரூபாய் 861.4 கோடி, பீகார்- ரூபாய் 741.8 கோடி, மேற்கு வங்கம்- ரூபாய் 652.2 கோடி, ஆந்திரா- ரூபாய் 387.8 கோடி, அருணாச்சலப் பிரதேசம்- ரூபாய் 34 கோடி, அசாம்- ரூபாய் 237.2 கோடி, சத்தீஸ்கர்- ரூபாய் 215 கோடி, குஜராத்- ரூபாய் 472.4 கோடி, ஹரியானா- ரூபாய் 187 கோடி, ஹிமாச்சல் பிரதேசம்- ரூபாய் 63.4 கோடி, ஜார்கண்ட்- ரூபாய் 249.8 கோடி, கர்நாடகா- ரூபாய் 475.4 கோடி, கேரளா- ரூபாய் 240.6 கோடி, மத்திய பிரதேசம்- ரூபாய் 588.8 கோடி, மணிப்பூர்- 26.2 கோடி, மிசோரம்- 13.8 கோடி, ஒடிஷா- 333.8 கோடி, பஞ்சாப்- ரூபாய் 205.2 கோடி, ராஜஸ்தான்- ரூபாய் 570.8 கோடி, சிக்கிம்- ரூபாய் 6.2 கோடி, தமிழகம்- ரூபாய் 533.2 கோடி, தெலங்கானா- ரூபாய் 273 கோடி, திரிபுரா- ரூபாய் 28.2 கோடி, உத்தரகாண்ட்- ரூபாய் 85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.