Skip to main content

இராஜபாளையம் டூ டெல்லி; மத்திய அரசு வழக்கறிஞராக ராம் சங்கர் ராஜா நியமனம்

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

  Ram Shankar Raja appointed as central government prosecutor!

 

இராஜபாளையத்திலிருந்து டெல்லி சென்று குறிப்பிட்ட சில ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ராம் சங்கர் ராஜா மத்திய அரசின் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சட்டம், நீதித்துறை மற்றும் சட்ட விவகாரங்கள் துறையின் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம் சங்கர் ராஜா, உச்சநீதிமன்றத்தில் 2012ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில பார் கவுன்சிலின் சிறப்பு வழக்கறிஞராகவும் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சிறப்பு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். பல்வேறு மத்திய மாநில அரசின் மூத்த வழக்கறிஞர்களுடனும், அட்வகேட் ஜெனரல் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆகிய அரசு வழக்கறிஞர்கள் உடனும் பல்வேறு வழக்குகளில் பணியாற்றியுள்ளார். 

 

குற்றவியல் துறையில் முதுநிலை பட்டமும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் "கொலிஜியம்" என சொல்லப்படும் அமைப்பு குறித்த ஆய்வில் டாக்டர் பட்டமும் பெற்றவர். இங்கிலாந்து பாராளுமன்றம், அமெரிக்க அட்டானிக் ஜெனரல் கமிட்டி, ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றில் இந்திய சட்டங்கள் குறித்து உரையாற்றியுள்ளார். உலகளாவிய சட்டங்கள் குறித்த படிப்பில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். சிங்கப்பூர் மேனேஜ்மென்ட் யுனிவர்சிட்டியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இந்திய அரசியலமைப்பு குறித்து இந்திய ஜனாதிபதி மாளிகையில் பயிற்சி கொடுத்துள்ளார்.

 

தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டின் பிரதமரை இந்திய உச்சநீதிமன்றத்திற்கு அரசு பயணமாக அழைத்து தனது சொந்த முயற்சியில் அழைத்து வந்து அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோபால் கவுடா, கொரியன் ஜோசப், நாகேஸ்வர ராவ் ஆகிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் 2015ம் ஆண்டு சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கை முதன்முதலில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடத்தினார். வேறு நாட்டின் பிரதமர் உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் வருகை தரும் முதல் நிகழ்வு என அனைவராலும் அப்போது பேசப்பட்டது. 

 

டெல்லியில் உள்ள அமிட்டி சட்ட பல்கலைக்கழகம், குரு கிராமில் உள்ள கோயங்கா பல்கலைக்கழகம், ராஜஸ்தானில் உள்ள மோடி பல்கலைக்கழகம், கிரேட்டர் நோய்டாவில் உள்ள லாயிட் சட்டக் கல்லூரி போன்ற இந்தியாவில் உள்ள பல்வேறு சட்ட கல்லூரிகளில் "மூட் கோர்ட்" எனப்படும் சட்ட கல்லூரி மாணவர்களுக்கான மாதிரி நீதிமன்ற நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.

 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் டெல்லி முதன்மை அமர்வில் அரசின் சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சிறப்பு வழக்கறிஞராக முக்கிய வழக்குகளில் வாதாடி உள்ளார். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை பாதுகாப்பு வழக்கு மற்றும் ரயில் தண்டவாளங்களில் யானைகளின் இறப்பை தடுப்பது குறித்த வழக்கில் நீதிமன்றத்திற்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நல்ல "ரிப்போர்ட்டபிள் ஜட்ஜ்மெண்ட்"  எனப்படும் சொல்லப்பட கூடிய தீர்ப்புகளை பெற்றுள்ளார். மேலும் கங்கையை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற பொது நல வழக்கை தாக்கல் செய்து அதில் வெற்றி பெற்று நீதிபதிகளின் பாராட்டை பெற்றுள்ளார். 

 

மனித உரிமைகள் குறித்த படிப்புகளில் ஆர்வம் கொண்டு அதிலும் முதுநிலை பட்டம் பெற்று சமீபத்தில் மனித உரிமைகள் குறித்த கருத்து அரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியுள்ளார். சமீபத்தில் தென்னக ரயில்வே பயனாளிகள் சிறப்பு பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவைத் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரியில் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்த தனது மேற்படிப்பில் ஆய்வு செய்து ஆய்வு கட்டுரையை பாராளுமன்ற கல்லூரியில் சமர்ப்பித்து சிறப்பு பட்டம் பெற்றுள்ளார். அரசியல் அமைப்பு மற்றும் பாராளுமன்ற படிப்புகள் குறித்த கல்லூரியின் ஆயுட்கால உறுப்பினராக கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Supreme Court verdict for case of Vvpad 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர். அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தன. மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 

Supreme Court verdict for case of Vvpad 

இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்” எனத் தெரிவித்தனர். 

Supreme Court verdict for case of Vvpad 

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Supreme Court verdict for case of Vvpad 

இந்த வழக்கில் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “தேர்தல் ஆனையம் கொடுத்த அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆதரங்களையும், அதற்கான வாதங்களையும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். எனவே வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட முடியாது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இரண்டு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஒரு முறையில்  சின்னம் பதிவு செய்யும் செயல்முறை முடிந்ததும், சின்னம் பதிவேற்றும் இயந்திரத்தை (SLU) சீல் வைக்க வேண்டும். வாக்குகள் எண்ணி முடித்த பின் அவை குறைந்தது 45 நாட்களுக்கு சேமிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.  

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது.