Skip to main content

சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கொடூரமாய் சிதைக்கப்பட்ட உடல்..! 

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Rajasthan Bhilwara girl child issue

 

ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வாரம் புதன்கிழமை அந்தப் பகுதியில் உள்ள இடத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்படி சென்ற அவர், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர், சிறுமி எப்போதும் செல்லும் இடங்களில் எல்லாம் தேடிச் சென்றுள்ளனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால், கோத்ரா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். 

 

இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி, பில்வாரா பகுதியில் இயங்கி வரும் நிலக்கரி உலை ஒன்றில் ஒரு பெண் உடல் பாதி எரிந்த நிலையில் இருப்பதாக கோத்ரா காவல்நிலையத்திற்குத் தகவல் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கோத்ரா காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று அந்த உடலை மீட்டு எடுத்துள்ளனர். பிறகு சிறுமி காணவில்லை எனப் புகார் கொடுத்த சிறுமியின் பெற்றோரை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும், மருத்துவப் பரிசோதனை மூலம், இறந்திருப்பது காணாமல் போன அந்தச் சிறுமிதான் எனத் தெரியவந்துள்ளது. 

 

Rajasthan Bhilwara girl child issue

 

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், சிறுமியின் மீதி உடல் பாகங்கள் அருகே இருந்த குளத்தில் இருந்து போலீஸார் எடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் கோத்ரா காவல்துறையினர் இதுவரை கலு லால்(25), கன்ஹா(21), சஞ்சை குமார்(20) மற்றும் பப்பு(35) ஆகிய  நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் ஒரு சிறுவன் ஈடுபட்டுள்ளதாகவும், அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் குற்றத்தில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட 10 நபர்களில் நான்கு பேர் பெண்கள் எனும் அதிர்ச்சி தகவலையும் கைது செய்யப்பட்ட நான்கு பேர் தெரிவித்துள்ளனர். 

 

Rajasthan Bhilwara girl child issue
மாதிரி படம்  

 

கொலை செய்யப்பட்ட சிறுமியின் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்களைத் தடயவியல் துறையினர் ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவில், சிறுமி உயிரோடு இருந்தபோதே அந்த நிலக்கரி உலையில் போடப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு அந்த நிலக்கரி உலையில் போடப்பட்டு எரிக்கப்பட்டாரா எனும் விபரங்கள் தெரியவரும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

இந்தக் கொலைக் குற்றத்தில், சிறுமியின் பெற்றோர் கடந்த புதன்கிழமை கோத்ரா காவல்நிலையத்தை அணுகியபோது, உதவி காவல் ஆய்வாளர் முறையாகச் செயல்படவில்லை எனத் தெரியவந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த உதவி காவல் ஆய்வாளரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

 

இந்நிலையில், குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் சிறுமியின் உடலைத் தகனம் செய்தனர். அப்போது சிறுமியின் தந்தை தானும் அந்தத் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால் உடனடியாக அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

 

14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்துக் கேள்வி எழுப்பிய அம்மாநில எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

 

Rajasthan Bhilwara girl child issue

 

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அந்த மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், “பில்வாரா சம்பவத்தில் அன்று இரவே 4-5 குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை வேறு என்ன செய்ய வேண்டும். குற்றச் சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பதில் மற்ற மாநிலங்களைவிட நாமே முதல் இடத்தில் உள்ளோம்” என்று தெரித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை சம்பவம்; தனிப்படை போலீசார் அதிரடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
avadi jewelry incident police in action

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு கடந்த 15 ஆம் தேதி (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

avadi jewelry incident police in action

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். 

avadi jewelry incident police in action

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி தினேஷ் குமார் மற்றும் சேட்டன்ராம் ஆகியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது சென்னையில் தங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.