Skip to main content

திருப்பித் தாக்கும் ராகுலின் சர்வாதிகாரி ட்வீட்..!  அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்..!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

rahul gandhi tweet about narendra modi

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களாக டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம், மத்திய மோடி அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறைகள் வெடித்தன. இதுகுறித்து ‘பிரதமர் மோடி அலட்சியமாக இருக்கிறார்; போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அக்கறை காட்டவில்லை; போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறார்’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

 

போராட்டங்களை மையப்படுத்தி ராகுல் காந்தியும் பிரதமர் மோடியை தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வருகிறார். போராடும் விவசாயிகள் டெல்லியில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக டெல்லி எல்லையில் அமைக்கப்படும் தற்காலிக தடுப்பு சுவர்கள் பற்றியும் விமர்சித்திருந்தார்.

 

இதனைக் கண்டிக்கும் விதமாக ட்வீட் செய்த ராகுல் காந்தி, உலகில் உள்ள சர்வாதிகாரிகளின் பெயர்கள் ‘எம்‘ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குகிறது என பதிவு செய்ததோடு, மார்கோஸ், முசோலினி, முஷாரப், முபாரக், மைக்கொம்பரோ, மிலோசெவிக், மொபட் என உலக சர்வாதிகாரிகள் பெயர்கள் சிலவற்றையும் சுட்டிக்காட்டியிருந்தார்.  

 

ராகுலின் இந்த ட்வீட் ஏகத்துக்கும் பரபரப்பானது. பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்குவதாகவே பொருள் கொள்ளப்பட்டன. பாஜக - காங்கிரஸ் தரப்பிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராகுலின் ட்வீட்டை வைத்தே நெட்டிசன்கள் திருப்பித் தாக்கி வருகிறார்கள்.

 

“சர்வாதிகாரிகளின் பெயர்கள் ‘எம்’ என்ற எழுத்தில்தான் துவங்குகிறது என்றால், மோதிலால் நேரு, மகாத்மா காந்தி, மன்மோகன் சிங், முலாயம் சிங், மம்தா பானர்ஜி ஆகியோரையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாமா ராகுல் ஜி?” என்று பதிலடி தருகின்றனர்.

 

இது காங்கிரஸ் மேலிடத்தில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ராகுலின் ட்விட்டர் பதிவால், காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களும் விமர்சனத்துக்குள்ளாவதால், ராகுல் காந்தி மீது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.