Skip to main content

அறியாமையை விட ஆணவம் ஆபத்தானது - ராகுல் காந்தி விமர்சனம்!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020
h


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 81 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவில் 9000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,50,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளதாக ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அறியாமையை விட ஆணவம் ஆபத்தானது என்று ஐன்ஸ்டீனின் தத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்