Skip to main content

கைதி கேக் வெட்ட...சிறை அதிகாரி படம் பிடிக்க... (வீடியோ) 

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
jail

 

 

 

 

உத்திரப்பிரேதசம் மாநிலம் பைஸாபாத் சிறையில் கைதி ஒருவர், தமது பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

 

சிவேந்திர சிங் என்பவர் பல்வேறு வழக்குகளில் சிக்கிக்கொண்டு சிறையில் தண்டனை பெற்று வருகிறார். கடந்த ஜூலை 23 ஆம் தேதி, இவருடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாட நினைத்துள்ளார். பின்னர், சிறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுத்து அவரையே கேக் வாங்கி வரவைத்து , அதை வெட்டி கொண்டாடியுள்ளார்.

 

 

 

 

அப்போது, இதை முழுவதுமாக வீடியோ எடுத்த சிறை அதிகாரி. பிறகு இதை சமூக வலைதளத்திலும் பதிவேற்றியுள்ளார். இதன் காரணமாக, அந்த கைதிக்கு இருந்த சிறப்பு சலுகை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வினய் குமார் என்ற சிறை அதிகாரிதான் இந்த பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடுகள் செய்ததாகவும், இதற்காக ஒரு லட்சம் ரூபாய் அவர் பெற்றுக்கொண்டதாகவும் கைதி ஒப்புக்கொண்டுள்ளார். 

 

இதுகுறித்து, உத்திரப்பிரேதச சிறைத்துறை அமைச்சர் ஜெய் குமார் ஜாக்கி கூறுகையில்," சிறையில் நடந்ததை பற்றி டிஐஜியிடம் விசாரணை நடத்த கூறியிருக்கிறோம். அது உண்மை என்று நிரூபணம் ஆனால், கண்டிப்பாக சிறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.             

சார்ந்த செய்திகள்