Skip to main content

   ’20 அணுகுண்டுகளை வீசி ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே இந்தியா அழித்துவிடும்’ - முஷரப்

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

 


புல்வாமா தாக்குதலையடுத்து  பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் துபாயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்குமா? இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? என்ற கேள்விகளுக்கு, ‘இந்தியா மீது ஒரு அணுகுண்டை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடியாக 20 அணுகுண்டுகளை வீசி ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே இந்தியா அழித்துவிடும்’’என்று தெரிவித்தார்.

 

mu

 

மேலும் அவர்,  ‘’அணு ஆயுதப்போர் என்ற நிலை ஏற்பட்டால் இந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அவர்கள் எதிர் தாக்குதல் நடத்த முடியாதவாறு நாம் முதல் தாக்குதலை நடத்த வேண்டும். 50 அணுகுண்டுகளை வீசி முதல் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தயாரா?’’என்று கேள்வி எழுப்புனார்.
 

சார்ந்த செய்திகள்