Skip to main content

புதிய கல்விக் கொள்கையில் 'மும்மொழிக் கொள்கை'... விருப்ப மொழியாக 'சமஸ்கிருதம்' -மத்திய அரசு தகவல்!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

new education policy ... Sanskrit as the preferred language in school and higher education-Central Government Information !!

 

புதிய கல்விக் கொள்கை மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்க மத்திய அமைச்சர்கள் செய்தியளர்களைச் சந்தித்தனர்.

கடந்த 34 ஆண்டுகளாகக் கல்விக்கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ரமேஷ் போக்ரியால், பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்து வருகின்றனர். இதில் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தும் முறை பற்றி மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே விளக்கினார்.

முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கும். இரண்டாம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறையில் இருக்கும். 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை இருக்கும். உயர்கல்வி படிப்புகள் விடுப்பு எடுத்து மீண்டும் படிக்கலாம். பொறியியல் போன்ற உயர் படிப்புகளில் மாணவர்கள் வருடக்கணக்கில் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பைத் தொடரலாம். 15 ஆண்டுகளில் இணைப்பு கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும். M.phil  படிப்புகள் நிறுத்தப்படும். உயர் கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தைக் கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படிப்பறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்புக் கல்வி மண்டலங்கள் அமைக்கப்படும். இந்திய மொழிகளுக்கான இலக்கிய, அறிவியல்பூர்வ வார்த்தைகளைக் கண்டறிய கவனம் செலுத்தப்படும். 

மனிதவளத்துறை அமைச்சகம் கல்வித் துறை அமைச்சகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படுகிறது. தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசியக் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இணையவழிப் பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். டிஜிட்டல் நூலகங்களும் தொடங்கப்படும். மாநில மொழிகளில் கல்வி கற்பிக்க இணையத்தளம் மூலம் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் எளிதாகக் கல்வி கற்க புதிய மென்பொருள் வசதிகள் ஏற்படுத்தப்படும். புதிய கல்விக் கொள்கையில், மூன்று வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும். குழந்தைகளுக்கு எளிதான வழிமுறைகள் மூலம் ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படும். புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆறாம் வகுப்பு முதல் தொழில்முறைக் கல்விகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும் எனப் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான கல்விமுறை இருக்கும். அதேபோல் செயற்கை நுண்ணறிவு முறையில் மாணவர்களின் ரேங் கார்டு தயார் செய்யப்படும். ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

http://onelink.to/nknapp


புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி ஒரு விருப்பமொழியாக இருக்கும். சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் இதர தொன்மைவாய்ந்த மொழிகளும் வழங்கப்படும். மும்மொழிக் கொள்கை இருந்தாலும் எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.