Skip to main content

"கலாச்சார உலகம் ஏழையாகிவிட்டது" -பிரதமர் மோடி உருக்கம்...

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

modi's condolence to spb family

 

 

பாடகர் எஸ்.பி.பி மறைவின் மூலம் இசை மற்றும் கலாச்சார உலகம் ஏழையாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். மேலும், இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் அவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்தவகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எஸ்.பி.பி.-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது. குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்