Skip to main content

பேதத்தை உருவாக்கிய குடியிருப்போர் சங்கம்; பாடம் எடுத்த மாணவர்கள்; களத்திற்கு வந்த மேயர்! 

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

Kerala thiruvanathapuram bus stand issue

 

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ஸ்ரீகார்யத்தில் உள்ளது சி.இ.டி என்ஜினியரிங் கல்லூரி. மிகவும் பிரபலமான இந்தக் கல்லூரியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியையொட்டி பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இடப்பட்டிருக்கும் பயணிகள் உட்காரும் இருக்கைகளின் பற்றக்குறையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கல்லூரி முடிந்து மாலை நேரங்களில் மாணவர்களும் பேருந்துக்காக காத்திருக்கும் நேரங்களில் போதுமான இருக்கைகள் இல்லாமலும், இருக்கைகள் நல்லமுறையில் இல்லாமலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருக்கும் இருக்கைகளில் மாணவ, மாணவிகள் ஒன்றாக அமர்ந்து வந்தனர். 

 

இந்த நிலையில், மாணவ மாணவிகள் சேர்ந்து உட்கார்ந்து இருப்பதை பார்க்க பிடிக்காத அந்தப் பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இரவோடு இரவாக அந்த இருக்கைகளை தனித்தனி இருக்கைளாக அறுத்து மாற்றினார்கள். வழக்கம் போல் 22-ம் தேதி காலையில் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Kerala thiruvanathapuram bus stand issue

 

இதையடுத்து கல்லூரி முடிந்ததும் மாலையில் வழக்கம் போல் பேருந்து நிறுத்தத்தில் குவிந்த மாணவ மாணவிகள், ‘லேப் டாப் எதிர்ப்பு’ என்ற பெயரில் நூதன போராட்டமாக அந்த தனித்தனி இருக்கையில் மாணவர்கள் மடியில் மாணவிகளும் மாணவிகள் மடியில் மாணவர்களும் தோள் மீது கை போட்டு உட்கார்ந்து எதிர்ப்பை காட்டினார்கள்.

 

இதை அந்த பகுதியில் செல்லும் மக்கள் ஆச்சரியமாக பார்த்ததோடு மாணவ மாணவிகளுக்கு ஆதரவையும் தெரிவித்தனர். நாங்கள் சேர்ந்து இருக்கையில் இருப்பதால் என்ன தவறு நடந்து விடப் போகிறது எங்களைப் புண்படுத்தும் விதமாக குடியிருப்போர் நலச்சங்கத்தினர் செயல்பட்டு விட்டனர் என கூறி அவர்களின் போராட்டத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது கேரளா முமுவதும் வைரலாக பரவியது.

 

Kerala thiruvanathapuram bus stand issue

 

இந்த நிலையில், 23-ம் தேதி அன்று அந்த பேருந்து நிறுத்தத்தின் இருக்கைகளைப் பார்வையிட வந்த திருவனந்தபுரம் இளம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரன், “கல்லூரிகளிலும் வெளியிடங்களிலும் மாணவ மாணவிகள் நண்பர்களாக மட்டும் பழகுவதில் எந்த தவறும் இல்லை” எனக் கூறினார். அவரிடம் மாணவ மாணவிகள் மீண்டும் இருக்கைகளை அமைக்க கோரிக்கை வைத்தனர். அதை உடனே அவர் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். இதற்கிடையில் மீண்டும் பழைய மாதிரியே இருக்கைகள் அமைக்க மேயர் உறுதி கொடுத்ததற்கு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.