Skip to main content

சிறுமியை கோவிலில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்த காவி மிருகங்கள்!  - தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

Published on 13/04/2018 | Edited on 13/04/2018
aasiya bhanu

 

காஷ்மீரை உலுக்கிய சிறுமி கற்பழிப்பு கொலை சம்பவத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் எம்.எஸ்.சையது இப்ராஹீம் விடுத்துள்ள அறிக்கை:


‘’ஜம்மூ காஷ்மீர் மாநிலம் ரசானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முஹம்மத் யூசுஃப், நஸீமா தம்பதியர். இவர்களுக்கு  8 வயதில் ஆசிஃபா பானு என்ற மகள் உள்ளார். 

 

குதிரைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ஆசிஃபாவை காணவில்லை.
 இந்நிலையில் சிறுமி காணாமல் போன 7 நாட்களுக்கு பிறகு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

 இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவி காமுகர்களிடம் ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் வழக்கை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். 

இதனையடுத்து பெற்றோர்களின் போராட்டம் காரணமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதன்பின்னர் இந்த வழக்கு ஜம்மூ காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

 

 இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 8 காவி பயங்கரவாதிகளை  கைது செய்துள்ளனர். 

 

சிறுமியை கடத்திசென்று கோவிலில் அடைத்து வைத்து, மயக்க மருந்தை கொடுத்து, தொடர்ச்சியாக பலநாட்கள் கொடூரமாக கற்பழித்துள்ளார்கள் இந்த மனித மிருகங்கள். இதன் பின்னர் அந்த சிறுமியை முகத்தில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.


பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் காஷ்மீரில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த ஈனச் செயலை கோவிலிலே அரங்கேற்றியதன் மூலம் காவிகள் , இந்துக்களின் கோவில்ளைக்கூட புனிதமாக கருதுவதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

 

  சக மதத்தவர்களை மனிதர்களாக கூட கருதாத காவி பயங்கரவாதிகளையும், குற்றத்தை மறைக்க நினைத்த காவல்துறையையும், பாஜக கூட்டணியில் நீடிக்கும் மஹபூபா முஃப்தி அரசின் கையாலாகாத தனத்தையும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

 

இந்த கொடூரத்தை செய்த காவி மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது.’’

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.