Skip to main content

நீண்ட நாட்களுக்கு பிறகு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா உயிரிழப்பு!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

m,

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்துவருகிறது. இதுவரை 17 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 36 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவைப் பொருத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,27,510 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,795 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். நேற்று (31.05.2021) ஒரே நாளில் நோய்த் தொற்றில் இருந்து 2,55,287 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை 2.59 கோடி பேர் நோய் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 18.95 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இந்தியாவில் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் சீராக குறைந்துவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்