Skip to main content

இந்த மோசமான நிலையை நவம்பர் மாதமே தெரிவித்த சுகாதர நிலைக்குழு - கண்டுக்கொள்ளாத மத்திய அரசு..!

Published on 29/04/2021 | Edited on 29/04/2021
The Health Committee which reported this bad situation in November itself - the unseen Central Government

 

கரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என கடந்த நவம்பர் மாதமே சுகாதரத்திற்கான நாடளுமன்ற குழு கணித்து வெளியிட்டிருந்தது. இதனை மத்திய அரசு பொருட்படுத்தாமல் இருந்ததன் காரணமே மோசமான நிலையை தற்போது நாடு சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தொடங்க இருப்பதையும் அதன் விளைவுகளையும் சுகாதரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த நவம்பரில் அறிக்கையாக தாக்கல் செய்திருந்தது.

 

சமாஜ்வாதி கட்சி ராஜ்கோபால் தலைமையிலான 31 எம்.பி.க்கள் அடங்கிய நிலைக்குழு தமது அறிக்கையை கடந்த நவம்பர் 21ஆம் தேதி மாநிலங்கவை தலைவரிடமும் 25 ஆம் தேதி மக்களவை சபாநாயகரிடமும் அளித்துள்ளது. இதை தொடர்ந்து 190 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிப்ரவரி 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று பரவல் மேலாண்மை என்ற இந்த அறிக்கையில் கரோனாவை எதிர்கொள்வதில் நாட்டிற்கு உண்டான பலம், பலவீனம் , வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்டவை விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது.

 

குறிப்பாக நாட்டில் கரோனா இரண்டா அலை ஏற்படும் என கணித்திருந்தது. இரண்டாவது அலையின் விளைவுகள் இது வரை நாடு சந்திக்காத வகையில் மோசமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கரோனாவின் தாக்கலில் ஐரோப்பிய நாடுகள் சிக்கி சீரழிந்தது போன்று இரண்டாம் அலையின் போது இந்தியால் மோசமான நிலை ஏற்படும் என அறிக்கையில் எச்சரித்து இருந்தது தெரிய வந்துள்ளது. இரண்டாவது அலையை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டிய கட்டாயம் குறித்தும் நாடளுமன்ற நிலைக்குழு விரிவாக விளக்கியிருந்தது.

 

கரோனா முதல் அலையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இரண்டாவது அலையை எதிர்கொள்ள வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருந்துகள் என்பன போதுமான அளவில் கையிருப்பில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வரும் காலங்களில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக பெரிய கூட்டங்கள் கூடுவதை கட்டாயம் தடுக்க வேண்டும் என நிலைக்குழு அப்போதே பரிந்துரை செய்தது. நாடெங்கும் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள மாநிலங்களை கண்டறிந்தும் அங்கு உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஊரக பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சுகாதர வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. சுகாதார பணிகளுக்கு போதுமான நிதிகளை ஒதுக்கீடு செய்வது அவசியம் என்று கூறிய நாடளுமன்ற நிலைக்குழு, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளில் ஒருங்கிணப்பு இல்லாததை சுட்டிக்காட்டி அவற்றை கலைய வேண்டியது அவசியம் என தெரிவித்திருந்தது. ஆனாலும் நிலைக்குழுவின் இந்த முக்கியதுவம் வாய்ந்த அறிக்கையை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்ட பிரச்சனைக்களுக்கான தீர்வு காண மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுகாதரத்திற்கான நிலைக்குழுவில் இடம்பெற்ற எம்.பி’க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாகவே கரோனா 2வது அலை நாட்டையே புரட்டுப்போட்டிருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பச்சை துரோகம்” - விஜய் சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vijay sethupathi election video

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் அன்றே நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தி.மு.க, காங்கிரஸ், இடது சாரிகள், வி.சி.க, உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனி கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க தேசிய ஜனநாயக கூடணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதையொட்டி தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விஜய் சேதுபதி வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பேசியதாவது, “நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தா நமக்கென்ன... இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்... ஒட்டு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை... இது போன்ற மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.   

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. 

நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலைத் பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்க, என்ன சொல்றாங்க என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க. இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்க” என்றார்.