Skip to main content

ஹெச்சிஎல் நிறுவனத்தின் லாபம் ரூபாய் 2,550 கோடியாக உயர்ந்தது!

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

இந்திய ஐடி துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனத்தில் (HCL COMPANY) மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் ரூபாய் 2550 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் லாபம் 14% அதிகரித்துள்ளதாக ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் முந்தைய நிதியாண்டில் ரூபாய் 2230 கோடியாக இருந்தது. மேலும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருமானம் 21% அதிகரித்து ரூபாய் 15990 கோடியாக உள்ளது. வரும் நிதியாண்டில் 14% முதல் 16% வரை வருமானம் அதிகரிக்கும் என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

HCL

 

கடந்த நிதி ஆண்டின் முழுமைக்குமான லாபம் 16% அதிகரித்து ரூபாய் 10120 கோடியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வருமானம் 19% அதிகரித்து ரூபாய் 60427 கோடியாக உள்ளது என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஹெச்சிஎல் நிறுவனம் (HCL IT COMPANY) தனது ஐடி நிறுவனத்தை அதிகரிக்கவும், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது 

சார்ந்த செய்திகள்