மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பாஸ்கிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள அசன்சோலில் என்ற பகுதியில் குல்டி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் தளவாட பொருட்கள் வைத்திருந்த இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.