Skip to main content

பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூபாய் 1,33,026 கோடியாக உயர்வு!

Published on 02/03/2022 | Edited on 02/03/2022
GST collection rises to Rs 1,33,026 crore in February

 

நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 1,33,026 கோடியாக அதிகரித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 1,33,026 கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18% அதிகம் ஆகும். அதேநேரம், கடந்த ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலான ரூபாய் 1,40,986 கோடியுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வசூலில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவை அடுத்து, தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. 

 

தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5% அதிகரித்து 7,393 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் காரணமாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடு போன்றவற்றை அமல்படுத்தியதே ஜிஎஸ்டி வசூல் குறைந்ததற்கு காரணம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாட்டிற்கு ரூபாய் 7,054 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய நிதியமைச்சகம்!

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

Central Finance Ministry allocates Rs 7,054 crore to Tamil Nadu

 

நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறையின் சீரமைப்புக்காக ஆந்திரா, உத்தரபிரதேசம், அசாம், ஒடிஷா, சிக்கிம் உட்பட 10 மாநிலங்களுக்கு ரூபாய் 28,204 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய நிதியமைச்சகம். 

 

அதன்படி, ஆந்திர பிரதேசத்திற்கு ரூபாய் 3,716 கோடியும், அசாம் மாநிலத்திற்கு ரூபாய் 1,886 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூபாய் 251 கோடியும், மணிப்பூருக்கு ரூபாய் 180 கோடியும், மேகாலயாவுக்கு ரூபாய் 192 கோடியும், ஒடிஷாவுக்கு ரூபாய் 2,725 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூபாய் 5,186 கோடியும், சிக்கிமிற்கு ரூபாய் 191 கோடியும், தமிழ்நாட்டிற்கு ரூபாய் 7,054 கோடியும், உத்தரப்பிரதேசத்திற்கு ரூபாய் 6,823 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


 

Next Story

மத்திய அரசு எதில் அதிகம் சம்பாதிக்கிறது..? எவற்றிற்கெல்லாம் அதிகம் செலவு செய்கிறது..? - ஒரு பார்வை

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

Let's look at the central government's budget and expenditure in one rupee!

 

2022- 2023ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (01/02/2022) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்காவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

 

ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு, செலவு குறித்து விரிவாக பார்ப்போம்!

அரசின் வருவாயில் கடன் மூலமான வருவாயே முதலிடம் வகிக்கிறது. மத்திய அரசின் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் 35 காசுகள் கடன் மற்றும் அது தொடர்பான  வழிகளில் வருகின்றன. ஜிஎஸ்டி வரி வருவாய் மூலம் 16 காசுகள் அரசுக்கு கிடைக்கிறது. 

 

வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரியின் மூலம் தலா 15 காசுகள் வருவாய் கிடைக்கிறது. அதேபோல், மத்திய கலால் வரி மூலம் 7 காசுகளும், சுங்க வரி மூலம் 5 காசுகளும் கிடைக்கின்றன. வரி இல்லாத வருவாய் மூலம் 5 காசுகளும், கடன் அல்லாத மூலதன வரவுகள் மூலம் 2 காசுகளும் கிடைக்கின்றன. 

 

ஒவ்வொரு ரூபாயும் எந்த அடிப்படையில் செலவழிக்கப்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்!

கடன்களுக்கான வட்டியைத் திரும்ப செலுத்துவதற்காக ஒவ்வொரு ரூபாயிலும் 20 காசுகளை அரசு செலவழிக்கிறது. ஒட்டுமொத்த வரி வருவாயில்  மாநில அரசுகளுக்கான பங்காக 17 காசுகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் திட்ட செலவினங்களுக்கு 15 காசுகள் செலவழிக்கப்படுகின்றன. நிதிக்குழுவிற்கு வழங்குவது உள்ளிட்ட வழிகளில் 10 காசுகள் தரப்படுகின்றன. 

 

மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மற்ற வகை செலவினங்கள் என்ற முறையில் தலா 9 காசுகள் செலவாகிறது. மானியங்கள் மற்றும் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடாக தலா 8 காசுகள் வழங்கப்படுகின்றன. அரசு தனது மொத்த வருவாயில் ஒவ்வொரு ரூபாயிலும் ஓய்வூதியம் என்ற வகையில் 4 காசுகளை செலவழிக்கிறது.