Skip to main content

புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம்..!

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

கரோனா வைரஸ் 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 500 பேரை தாண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Corona Virus - Puducherry

 



இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,  புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் ஏற்பட்டள்ள பொருளாதார இழப்பை சமாளிக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்