Skip to main content

கரோனா எதிரொலி... நாட்டு மக்களிடையே நாளை உரையாற்றுகிறார் மோடி...!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. உலக அளவில் 1,98,214 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

 

Corona Virus issue- PM modi to address nation tomorrow

 

 

இதற்கிடையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு இன்று கூடியது. கூட்டத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை இரவு 8 மணிக்கு கரோனா பாதிப்பு குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்தும் மோடி பேச உள்ளதாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  
 

 

சார்ந்த செய்திகள்