Skip to main content

கொல்கத்தாவில் வானில் பறந்த சீன இளைஞரின் ட்ரோன்... கைது செய்த காவல்துறை...

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

நேற்று மாலை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற விக்டோரியா மெமோரியல் நினைவுச்சின்ன கட்டிடத்தின் மேலே ட்ரோன் மூலம் புகைப்படம் எடுத்த சீன இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 

victoria memorial

 

சீனாவைச் சேர்ந்த 34 வயதான லய் ஷீவெய் என்பவர் முறையான அனுமதி பெறாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியான விக்டோரியா நினைவு சின்னத்தின் அருகில் ட்ரோன் பறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். ட்ரோனும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர் யார், எதற்காக இந்தியா வந்தார், அனுமதி வாங்காமல் ட்ரோன் மூலம் அந்த பகுதியில் ஏன் புகைப்படம் எடுத்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட சீன இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு பின்னர், மார்ச் 25 வரை அவர் போலீசார் காவலில் இருப்பார் என கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்