Skip to main content

செஸ் ஒலிம்பியாட்- பிரதமரின் பயண விவரம்! 

Published on 24/07/2022 | Edited on 24/07/2022

 

Chess Olympiad- Prime Minister's travelogue!

 

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில் கலந்துக் கொள்ள சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண விவரங்கள் வெளியாகி உள்ளன. 

 

அதன்படி, வரும் ஜூலை 28- ஆம் தேதி அன்று பிற்பகல் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 04.45 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு விமான தளத்திற்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். அங்கு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய பின்பு பிரதமர் நரேந்திர மோடி, அன்றைய தினம் இரவு ஆளுநர் மாளிகைக்கு சென்று தங்குகிறார். 

 

அதைத் தொடர்ந்து, ஜூலை 29- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு செல்கிறார். பின்னர், காலை 11.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து தனிவிமானம் மூலம் அகமதாபாத்திற்கு செல்கிறார்.  

 

சார்ந்த செய்திகள்