Skip to main content

“மத்திய அரசு பாசிச கொள்கையை கடைப்பிடிக்கிறது” ஆ.ராசா எம்.பி!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
The central govt adheres to the principle of favoritism A Rasa MP

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது.

இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா எனப் பலரும் உரையாற்றினார்.

அந்த வகையில் மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சுகையில், “பாசிச கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. சிறுபான்மையினர், பட்டியலினத்தோரை மத்திய அரசு ஒடுக்கப்பார்க்கிறது. மத்திய பாஜக அரசு நினைப்பதை குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலமாக சொல்கின்றனர். 8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். ஒவ்வொருவரும் அவரவர் செய்துகொண்டிருக்கும் வேலையையே செய்ய வேண்டும் எனப் பாஜக நினைக்கிறது. பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம் கொண்டவை. பாசிச கொள்கை கொண்ட பாஜக எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Adjournment of Lok Sabha without specifying a date

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இதனையொட்டி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்பி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திமுக எம்பி ஆ.ராசா எனப் பலரும் உரையாற்றினார்.

Adjournment of Lok Sabha without specifying a date

இத்தகைய சூழலில் தான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி இன்று (02.07.2024) பதில் அளித்துப் பேசினார். இதற்கிடையே மணிப்பூர் விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் பிரதமர் மோடி 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பதில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் நாளை (03.07.2024) வரை நடக்கவிருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த வேண்டுமென்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் நாளை (03.07.2024) விவாதிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி இருந்த நிலையில் மக்களவையைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“காங்கிரஸ் வரலாற்றில் இது மூன்றாவது பெரிய தோல்வி” - பிரதமர் மோடி பேச்சு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
This is the third biggest defeat in the history of Congress PM Modi speech

நாடாளுமன்றத்தின் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (02.07.2024) பதில் அளித்துப் பேசி வருகிறார். அப்போது அவர் பேசுகையில், “2014க்கு முன்பு இந்திய மக்களின் மனதில் இந்த நாட்டுக்கு எதுவும் நடக்காது என்ற எண்ணம் குடியேறிய ஒரு காலம் இருந்தது. சமூகம் விரக்தியின் ஆழத்தில் மூழ்கியது. பின்னர் நாட்டு மக்கள் எங்களை சேவை செய்ய தேர்வு செய்தனர். அவர்களும் அந்தத் தருணமும் நாட்டில் மாற்றத்தின் சகாப்தத்தைத் தொடங்கின. கடந்த 10 ஆண்டுகளில் எனது அரசாங்கம் பல வெற்றிகளையும், பல சாதனைகளையும் பெற்றுள்ளது. நம்பிக்கையுடனும் நில்லுங்கள் என்று அனைவரையும் வலிமையால் நிரப்பிய ஒரு சாதனை நாட்டை விரக்தியின் ஆழத்திலிருந்து வெளியே இழுத்தது. நாட்டில் தன்னம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டது. இதனை நாடு நம்பத் தொடங்கியது. 

2014க்கு முன் எதுவும் நடக்காது என்று சொன்னவர்கள் இந்த நாட்டில் எதுவும் நடக்கலாம், இந்த நாட்டில் எல்லாம் சாத்தியம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் வேலையை நாங்கள் செய்தோம். 2024 தேர்தலில் காங்கிரஸுக்கு இந்நாட்டு மக்கள் ஒரு ஆணையை வழங்கியுள்ளனர். அதில் நீங்கள் எதிர்க்கட்சியில் உட்காருங்கள். வாதங்கள் முடியும்போது கூச்சல் போடுங்கள் என்பதே இந்த நாட்டின் ஆணை ஆகும். 

This is the third biggest defeat in the history of Congress PM Modi speech

370வது சட்டப்பிரிவை வாக்கு வங்கி அரசியல் ஆயுதமாக ஆக்கியவர்கள் ஜம்மு காஷ்மீரின் நிலையை அங்குள்ள மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஆக்கிவிட்டனர். ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் இந்திய அரசியல் சாசனம் நுழைய முடியவில்லை. இங்கு அரசியல் சட்டத்தை தலையில் தூக்கி வைத்து ஆடும் மக்களுக்கு ஜம்மு காஷ்மீரில் அதை அமல்படுத்த தைரியம் இல்லை. இன்று சட்டப்பிரிவு 370 இன் சுவர் இடிந்து விழுந்துள்ளது. கல் வீச்சு நின்று விட்டது. அங்கு ஜனநாயகம் வலுவாக உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நம்பி இந்தியக் கொடியை நம்பி இந்திய ஜனநாயகத்தை நம்பி மக்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வருகின்றனர். இந்த நம்பிக்கை 140 கோடி நாட்டு மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. காங்கிரஸ் வரலாற்றில் இது மூன்றாவது பெரிய தோல்வியாகும்.

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதாரத்தை 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இப்போது, ​​நாட்டின் பொருளாதாரத்தை 3வது இடத்திற்கு கொண்டு செல்வோம். கடந்த 10 ஆண்டுகளில் மொபைல் போன் உற்பத்தியில் இந்தியாவை பெரிய நாடாக மாற்றியுள்ளோம். இந்திய மொபைல் போன்களின் பெரிய ஏற்றுமதியாளர். இப்போது, ​​எங்கள் பதவிக்காலத்தில் செமிகண்டக்டர்கள் மற்றும் பிற துறைகளிலும் இதையே செய்யப் போகிறோம். உலகின் முக்கியமான படைப்புகளில் பயன்படும் சில்லுகள், அந்த சில்லுகள் என் இந்திய மண்ணில் தயார் செய்யப்படும். 

This is the third biggest defeat in the history of Congress PM Modi speech

எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. 99 மதிப்பெண்கள் எடுத்த ஒரு பையன் இருந்தான் அதை அவன் எல்லோருக்கும் காட்டுவது வழக்கம். 99 என்று கேட்டதும் மக்கள் அவரை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். அப்போது ஒரு ஆசிரியர் வந்து ஏன் இனிப்பு விநியோகிக்கிறீர்கள்?. 100க்கு 99 மதிப்பெண் எடுக்காமல் 543க்கு 99. தோல்வியில் உலக சாதனை படைத்திருக்கிறீர்கள் என்பதை இப்போது அந்தக் குழந்தைக்கு யார் விளக்குவது. ஒரு ஜாதிக்கு எதிராக இன்னொரு ஜாதியை முன்னிறுத்துவதற்காக ஒவ்வொரு நாளும் புதுப்புது கதைகளை உருவாக்கி, புதிய திட்டங்களை காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது” எனப் பேசினார்.