Skip to main content

"பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை...

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

மத்திய அரசைக் கண்டித்து ஐஎன்டியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

 

central government warns employees over bharat bandh

 

 

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், நிலக்கரி துறையில் 100% நேரடி அந்நிய முதலீடுக்கு மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொழிலாளர்கள் விதிமுறைப்படி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அதிகாரம் அளிக்கப்படவில்லை. சங்கம் அமைக்கும் உரிமை என்பது வேலைநிறுத்தமோ, போராட்டமோ நடத்துவதற்கான உரிமை அல்ல. எந்த சட்டப்பிரிவும், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய அதிகாரம் அளிக்கவில்லை. எனவே மத்திய அரசு ஊழியர்கள் எந்த வகையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது நாடு தழுவிய வேலை நிறுத்தம் - வட மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

s

 

மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்தால், பெரிய அளவிலான விவாதங்கள் இன்றி மத்திய அரசு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றிவருகிறது. குறிப்பாக வேளாண் சட்டம் தொடர்பாக இந்தியாவில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்த நிலையிலும், அதனை மத்திய அரசு நிறைவேற்றியது. இதனைக் கண்டித்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராடிவருகிறார்கள். இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளார்கள். 

 

இந்நிலையில், வேளாண் சட்டம், பெட்ரோல் விலை உயர்வு, அரசுத் துறைகள் தனியார்மயம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, இன்று (27.09.2021) காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பேருந்து போக்குவரத்து எந்த இடையூறும் இன்றி செயல்படுத்தப்படுகிறது. புதுவையில் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு முழு அடைப்பு போராட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தங்களின் கடைகள், வணிக நிறுவனங்களை அடைத்துள்ளனர். 

 

 

Next Story

தேனியில் நாளை முதல் முழு ஊரடங்கு!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
gv

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. மதுரையில் கரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் அதன் பாதிப்பு இருந்து வருகின்றது. இதற்கிடையே, தேனி மாவட்டத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து நாளை மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.