Skip to main content

17 வயது பெண் குழந்தைக்கு நடந்த கொடூரம்..! பெற்றோரை மிரட்டும் அரசியல் புள்ளிகள்!  

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

Atrocity against 17 year old girl ..! Political points that intimidate parents!

 

புதுச்சேரி, கிருமாம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப் பின்பு காவ்யா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒரே மகள் பிறந்தார். 17 வயதாகும் காவ்யா தற்போது பி.எஸ்.சி. சைக்காலஜி முதலாமாண்டு படித்துவந்தார். கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி காவ்யாவின் தாயார் பரமேஸ்வரி வெளியில் சென்றிருந்த நிலையில் காவ்யா மாடியில் துணி காயவைத்துக்கொண்டிருந்தார். 

 

அப்போது இவர்களது தெருவில் 4 வீடு தள்ளி வசித்துவந்த அருண்குமார் (24) என்ற இளைஞர் காவ்யா வீட்டின் பக்கவாட்டு வழியாக வீட்டினுள் புகுந்துள்ளார். காவ்யா மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவுடன் கதவை சாத்திய அருண்குமார், காவ்யாவின் வாயில் துப்பட்டாவைத் திணித்து வாயை அடைத்து,  சுவற்றில் நெட்டித் தள்ளி அவரது வயிற்றில் தனது வலது காலால் உதைத்துள்ளார். இதில் காவ்யா மயக்கமான பிறகு, அவரது துணிகளைக் களைத்து மிருகத்தனமாக நடந்துள்ளார். மேலும், அருண்குமார் வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார். அந்த வீடியோவைக் காவ்யாவிடம் காட்டி அவரது அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.

 

கடந்த ஜூன் 6ஆம் தேதி மாதவிடாய் என்ற போதிலும் விடாமல் அவரை 4, 5 முறை வன்புணர்ச்சி செய்துள்ளார். இதில் காவ்யாவுக்கு உதிரப்போக்கு அதிகமாகியுள்ளது. மேலும் சித்த பிரமை பிடித்தவர் போலும் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் பரமேஸ்வரி, கேரளாவில் உள்ள தனது தங்கை சித்ராவை வரவழைத்து ஜுன் 12ஆம் தேதி மாலை உடனடியாக கேரளாவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர் பரிசோதனை செய்ததில், உதிரப்போக்கு நிற்காமல் சென்றுள்ளது. மேலும், கிட்னி பாதிக்கப்பட்டு, லிவர் ஃபெயிலியர் ஆகியுள்ளது என தெரிவித்தனர். காவ்யாவின் நிலையைக் கண்ட மருத்துவர், அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து விசாரித்ததில் காவ்யாவுக்கு வேறு ஏதோ பிரச்சனை என தெரிந்துகொண்டு, அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். 

 

பின்னர் காவ்யாவை அனந்தபுரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது சோதனை செய்ததில் காவ்யாவின் மார்பு, பிறப்புறுப்பு பகுதிகளில் பற்களால் கடித்த காயங்களும், கொடூரமான காயங்களும் இருந்துள்ளன. அதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். மருத்துவக் கல்லூரியில் சீரியஸான நிலைமையில் இருந்த காவ்யாவை பார்த்த மருத்துவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததையடுத்து பெண் காவலர்களும் பெண் நீதிபதியும் நேரில் வந்து விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது, நடந்தவை அனைத்தையும் நீதிபதியிடம் கூறி காவ்யா கதறி அழுதுள்ளார். லிவர் டிரான்ஸ்பரன்ஷன் செய்வதற்குத் தயாரான நிலையில், ஜூன் 19ஆம் தேதி காவ்யா உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கேரள காவல்துறை புதுச்சேரிக்கு வந்து அருண்குமாரை கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர்.

 

இந்தநிலையில், இன்று (24.06.2021) செய்தியாளர்களைச் சந்தித்த காவ்யாவின் தாயார் பரமேஸ்வரி மற்றும் உறவினர்கள், "சம்பவம் நடைபெற்ற பகுதி புதுச்சேரி என்பதால் காவ்யாவின் பெற்றோர் புதுச்சேரியில் உள்ள மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அதை அவர்கள் வாங்காமல் அலட்சியப்படுத்துவதாகவும், பாஜகவைச் சேர்ந்த அரசியல் புள்ளிகள் அருண்குமார் பெற்றோருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்” என குற்றம்சாட்டினர்.

 

இதனிடையே புதுச்சேரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட பெண் காவ்யாவின் தாயாருக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.