Skip to main content

ஏடிஎம்மில் பணமில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் - ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021

 

10 thousand rupees fine if there is no cash in the ATM - Reserve Bank of India announcement!

 

தொடர்ந்து ஏடிஎம்மில் பணமில்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அபராதம் விதிக்கப்படும் முறையை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கொண்டுவர இருக்கிறது.
 
 
 
வங்கி ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் அதுதொடர்பான நடைமுறைகள் குறித்தும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, வங்கி ஏடிஎம்களில் தொடர்ந்து 10 மணிநேரம் பணம் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. எனவே வங்கிகள் தங்களுக்கான ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ள ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தப் புதிய நடைமுறை வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதிமுதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.
 
 

சார்ந்த செய்திகள்