சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தி.மு.கவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் எழுதிய "2ஜி அவிழும் உண்மைகள்" என்னும் நூல் வெளியீட்டு விழா, நடைபெற்றது.
கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் நடைப்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், கவிஞர்.வைரமுத்து, தமிழ் இந்து நாளிதழில் பதிப்பாசிரியர் இந்து என்.ராம், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, அதன் முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து விழாவில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் பேசியதாதவது,
வரலாற்றில் பல வழக்குகள் உண்டு, ஒரு வழக்கே வரலாறானது என்றால் அது 2ஜி வழக்கில் தான். 2ஜி வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, மேல்முறையீடு செய்யாமல் விட்டு விடுவதற்கு இது என்ன சங்கரராமன் கொலை வழக்கா? என கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய இந்து என்.ராம், 2ஜி வழக்கில் எடுத்து கொண்ட சுறுசுறுப்பை வியாபம் ஊழல் வழக்கில் மத்திய அரசு காட்டவில்லை. ஊழலலுக்கு எதிரான வழக்குகள் நம் நாட்டில் எப்படி நடக்கிறது. யார் மூலம் நடத்தப்படுகிறது என ஆராய்ந்தால் நாம் அதில் தத்துவ ஞானியாக மாறிவிடும் அபயாம் உள்ளது. தங்களை எதிர்ப்பவர்களுக்கு அழுத்தம் தர மட்டுமே மத்திய அரசு சி.பி.ஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது என கூறினார்.
இதனையடுத்து விழாவில் பேசிய கவிஞர்.வைரமுத்து, திராவிட இயக்கத்தை அழிக்க ஊதி பெரிதாக்கியதே 2ஜி வழக்கு என்றும், ஆற்றின் நீரோட்டத்தில் குப்பைகளும், அழுக்குகளும் வந்து போகும், ஆனால் திராவிட இயக்கம் என்ற ஜீவநதி என்றும் அழியாது என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்களில் யாரோ ஒரு ராஜா கருத்தினை தெரிவிப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை மறைமுகமாக விமர்சித்த அவர், இணையத்தையே அலைபேசியில் விரைவாக வர வழி வகை செய்தவர் இந்த ஆ.ராசா என தெரிவித்தார்.
பின்னர் பேசிய ஆ.ராசா, 2ஜி அலைக்கற்றை ஊழல் ஆரம்பத்திலேயே என்னால் மறுக்கப்பட்டது. என்னை விசாரித்தவர்களுக்கு 2ஜி ஸ்பெக்டரம் என்றால் என்ன என தெரியவில்லை. அதை நான் விளக்கினாலும் 2ஜி என்றால் என்ன என்று அவர்களுக்கு புரியவில்லை. இறுதியல் நான் ஊழல் செய்ததாக கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் 15 முறை ஆஜராகி விளக்கம் அளித்தேன். நானே நீதிமன்ற மேடை ஏறி சொன்னால் மட்டுமே இதன் உண்மை வெளிவரும் என்பதற்காகவே வழக்கில் நானே வாதாடினேன். இதனை தவறாகக் கணித்துள்ளார் வினோத்ராய். இறுதியில் 2ஜி வழக்கில் ஊழல் செய்யப்படவில்லை என்று நிரூபனமானது. சி.பி.ஜ. தரப்பில் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் இந்த வழக்கை யூகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்துள்ளதாக ஓ.பி.ஷைனி இவ்வழக்கின் தீர்ப்பினை வாசித்தார்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கில் என்னையும், கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தனர். இதுவரை யாரும் நான் எழுதிய புத்தகத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்யவில்லை இதுவே என் புத்தகத்திற்கு கிடைத்த வெற்றி என அவர் கூறினார்.
பின்னர், ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை என்ற பாடலை பாடி தன் உரையை ஆரம்பித்தார் மு.க.ஸ்டாலின், இந்த விழா தி.மு.க.வின் விடுதலை விழா. ராசாவின் விடுதலை மட்டுமல்ல, என் தங்கை கனிமொழியின் விடுதலை, கலைஞர் டி.வி.யின் விடுதலை, ஏன் இதை தி.மு.க.வின் விடுதலையாகவே நான் பார்க்கின்றேன்.
1959 ஆண்டின் விதிமுறைப்படி எந்த அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதோ அதே அடிப்படையில் தான் ஆர்.ராசவும் ஒதுக்கியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்தினால் நாடளுமன்றத்தை எதிர்கட்சிகள் பலமாக முடக்கினார்கள். எனவே உடனடியாக கலைஞர் ராசாவை அழைத்து ராஜினாமா செய்யச் சொன்னார். உடனே ராசவும் ராஜினாமா செய்தார்.
இது போன்று தற்போது மத்தியில் நடக்கும் பல ஊழல்களுக்கு குற்றம் நிரூபிக்கப்படாத போதிலும், இப்போதைய எம்.பி.க்களோ, அமைச்சர்களோ தைரியமாக ராஜினாமா செய்வார்களா? அதனையும் செய்து இவ்வழக்கில் ஆளும் தரப்பின் சாட்சியங்களையும், சி.பி.ஐ.தரப்பு வாதங்களையும் திணறடித்து பின் வாங்க செய்து திறம்பட வாதடிய ஒரே முன்னாள் எம்.பி ஆ.ராசா மட்டுமே.
இதன் மூலம் திமுகவின் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியிருக்கிறது. விமர்சனம் செய்தவர்கள் வாய் அடைத்து மறைந்து நிற்கிறார்கள். விடுதலை பெற்றவர்கள் வெளியே வலம் வருகிறார்கள் என அவர் கூறினார்.
என்னை விசாரித்தவர்களுக்கு 2ஜி என்றால் என்ன என்பதே தெரியவில்லை: புத்தக வெளியீட்டில் ஆ.ராசா பேச்சு!
சார்ந்த செய்திகள்
Next Story
'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.
— M.K.Stalin (@mkstalin) April 27, 2024
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால்,…
Next Story
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.
அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.
அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்