Skip to main content

அதிமுக அலுவலகக் கண்ணாடி, அமைச்சர் வாகனத்தை அடித்து நொறுக்கிய கட்சியினர் ! போலீஸ் தடியடி!

Published on 14/03/2021 | Edited on 14/03/2021

 

ttttt

 

கடலூர் மத்திய மாவட்ட அதிமுக அலுவலகம் கடலூர் பாதிரி குப்பத்தில் உள்ளது. இந்தநிலையில் குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளராக கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி அறிவிக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு வேட்பாளர் மாற்றப்பட்டு பரங்கிப்பேட்டையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்திற்கு குறிஞ்சிபாடி தொகுதிக்கு சீட் வழங்கப்பட்டது.  

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பலாக கடலூர் அதிமுக அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த கார்கள் மற்றும் அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தனர். பின்னர் அமைச்சர் சம்பத்தின் தேர்தல் பிரச்சார வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். அப்போது முதல் தளத்தில் அமைச்சர் சம்பத்தின் மகன் பிரவீன் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுகொண்டு இருந்த்து. 

 

இதனையடுத்து அதிமுவினர் சிலர் அமைச்சர் சம்பத்தின் மகன் பிரவினை  பத்திரமாக மேல் மாடிக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் பழனிச்சாமி ஆதரவாளர்களை துரத்தி சென்று தாக்கினர்.

 

 இதில் பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார்கள் உடைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினர் மீதும் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். இதனையெடுத்து அதிமுக அலுவலகத்தை சுற்றி முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.