Skip to main content

“ஆணாதிக்க உலகில் தான் வாழ்கிறோம்” - ராஷ்மிகா வேதனை

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

rashmika mandana about  woman looks in film industry

 

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, இந்தியில் அமிதாப்பச்சனின் 'குட் பை' மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் 'மிஷன் மஜ்னு' உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டிலும் கவனம் பெற்றுள்ளார். இப்போது இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'அனிமல்' படத்திலும் தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு 'புஷ்பா 2' படத்திலும் ஜோடியாக நடித்து வருகிறார்.   

 

இந்த நிலையில் ஒரு ஆங்கில இணைய ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள ராஷ்மிகா, திரைத்துறை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். ‘பெண்களின் தோற்றம் திரைத்துறையில் எவ்வளவு முக்கியம்’ என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ராஷ்மிகா, "துரதிர்ஷ்டவசமாக நாம் ஒரு ஆணாதிக்க உலகில் தான் வாழ்கிறோம்" என வேதனையுடன் சொல்கிறார். மேலும் "முன்பு ஸ்டைலிங்கில் பெண்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தது. ஒவ்வொரு கலாச்சாரமும் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிவதற்கு வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளது. ஆனால் பெண்களின் ஃபேஷன் மிகப்பெரிய அளவில் தற்போது மாறிவிட்டது. இப்போது ஸ்டைலாக இருப்பதற்கு அனைவருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அது அதிகரித்து வருகிறது" என்றார். 

 

மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய ராஷ்மிகா, "சிறிய சிறிய விஷயங்களும் எனக்கு முக்கியம். நான் எழுந்ததும் என் செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடுகிறேன். என் நண்பர்களைச் சந்திக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை; அவை ஒரு நபரை உருவாக்கலாம் அல்லது மனத் தளர்வை உண்டாக்கலாம். அதனால்தான் யாராவது ஏதாவது சொன்னால் அது முக்கியமானதாக நான் பார்க்கிறேன். வீட்டிற்கு திரும்பினால் அனைவரின் பாதங்களையும் மரியாதையுடன் தொட்டு வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். நான் யாரையும் வேறுபடுத்த விரும்பவில்லை. அதனால் தான் எங்கள் வீட்டு உதவியாளர்களின் கால்களையும் தொட்டு வணங்குகிறேன்." என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனிமல் பட விமர்சனம் குறித்து ராஷ்மிகா பதில்  

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rashmika about his animal scene troll

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் ராஷ்மிகா பேசும் தொனி கிண்டலுக்கும் கேலிக்கும் சமூக வலைதளங்களில் உள்ளானது. இந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு தற்போது பதிலளித்துள்ளார் ராஷ்மிகா. இது தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ராஷ்மிகா, “பெண்களை உருவ கேலி செய்யும் மனிதர்களை எனக்கு பிடிக்காது. அவர்கள் என் படத்தை பற்றியும், நான் வசனம் பேசும்பொழுது என் முகத்தை பற்றியும் கிண்டல் செய்கிறார்கள். என் நடிப்பு எப்படி இருந்தது என எனக்கு தெரியும். நான் அந்த காட்சியில் நடித்து ஐந்து மாதங்கள் ஆகிறது.

rashmika about his animal scene troll

 

அந்த சீன் ஒன்பது நிமிடம் கொண்ட பெரிய சீன். அதில் நடிக்கும் போது செட்டில் இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினார்கள். சிறப்பாக வந்துள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால் ட்ரெய்லர் வெளியான போது, அதே காட்சியில் நான் பேசிய ஒரு வசனம் கிண்டலுக்குள்ளானது. அதை பார்க்கும் போது ஒரே காட்சியை செட்டில் இருந்தவர்கள் ரசிக்கிறார்கள், ரசிகர்கள் ட்ரோல் செய்கிறார்கள். அப்போது நான் எதில் வாழ்கிறேன் என தோன்றியது. என்ன நடித்தேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் ரசிகர்களுக்கு அந்த 10 செகண்ட் மட்டும் தான் தெரிகிறது” என்றார்.

Next Story

‘வாயா சாமி... மன்மத சாமி...’ - திகைத்துப் போன ராஷ்மிகா மந்தனா!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Rashmika Mandanna gets warm welcome in Tokyo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக அறியப்படுகிறார் ராஷ்மிகா. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், டோக்கியோவில் 8வது க்ரஞ்சி ரோல் அனிமி விருது விழா நாளை (02.03.2024) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விருது வழங்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதற்காக மும்பை விமான நிலையத்திலிருந்து டோக்கியோவுக்கு சென்றார். டோக்கியோவில் இறங்கிய அவர், புஷ்பா படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் உள்ளிட்ட அவரது புகைப்படங்களுடன் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்ததை பார்த்தார். 10க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பைக் கண்ட ராஷ்மிகா திகைத்துப் போய் நின்றார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.