Skip to main content

அமைச்சரால் அமராவதி ஆற்றில் புதைக்கப்படும் கரூர் மாவட்ட அதிமுக!!! ர.ர.க்கள் வேதனை!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020


    

ddd

 

கடந்த சில வாரத்திற்கு முன்னர் கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் ''கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க தான் ஜெயிக்கும், அதுவும் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும், இதற்கு பந்தயம் கட்ட தயாரா? கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவினர் ரெடியா?'' என்று கரூர் மாவட்ட திமுகவினர் ஒரு வீடியோவை வெளியிட்டு அதிமுக வட்டாரத்தினை அலற விட்டனர்.

 

பதிலுக்கு ''நாங்கள் ரெடி'' என்று அதிமுக வட்டாரத்திலும் சிலர் வீடியோ பதிவு செய்து வைரலாக வெளியிட்டாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கு அடுத்ததாக போஸ்டர் யுத்தம், சுவர் விளம்பரம் என்று இரண்டு கட்சியினரும் மாறி மாறி கரூரில் அரசியல் நடத்த அது சமீபத்தில் திமுக தரப்பில் ஒரு கொலையில் முடியும் அளவுக்கு போனது.    

  

ddd

 

நாம் இது சம்பந்தமாக மேலும் விசாரித்தபோது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு அதிமுகவில் இருந்தபோது தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தார். சசிகலா ரூட் எடுத்து அவர் பண்ணிய அட்ராசிட்டி, மூத்த அமைச்சர்களையே முகம் சுழிக்க வைத்தது.

 

இந்த நிலையில் தான் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் மூத்த அமைச்சர்கள் சிலர் செந்தில்பாலாஜியின் தனி ஆவர்த்தனத்தைப் பற்றி சொல்ல, செந்தில் பாலாஜிக்கு செக் வைத்து விஜய்பாஸ்கரை களம் இறக்கினார் ஜெயலலிதா. சரி இவராவது ஒழுங்கா இருப்பார் என்றால் அது தான் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவரும் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்து விட்டார். 

 

ddd


சுவர் விளம்பரங்களில் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்தியே, அதாவது காலிங்கராயரே, வல்லவனே என்று பல வசனங்களை போட்டு விளம்பரப் படுத்துகிறார். அதேபோல் தான் வைத்திருக்கும் ஒரு அறக்கட்டளை பெயரில் நல்லத்திட்ட உதவிகள் வழங்கி அந்த அறக்கட்டளையை முன்னிறுத்தி செயல்படுகிறாரே தவிர கட்சியை முன்னேற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

இதனால் கரூர் மாவட்ட அதிமுகவினரே இவர் மாவட்ட செயலாளராக இருந்தால் நான்கு தொகுதியையும் இழப்பதை தவிர வேறு வழியில்லை என்று தலைமைக்கு புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

 

அதேபோல் அம்மாவால் ஆசிர்வதிக்கப்பட்ட முன்னாள் இளம்பெண்கள் பாசறை மாநில துணை தலைவராக இருந்த செந்தில்நாதன், அரவக்குறிச்சி தொகுதியில் நின்று முன்பு செந்தில்பாலாஜியுடன் தோல்வியுற்றார். இந்த தடவை எப்படியும் அவர் அரவக்குறிச்சி தொகுதிக்கு சீட் கேட்பார். அப்படி கேட்டு ஜெயித்து விட்டால் எப்படியும் அமைச்சர் பதவி வாங்கிவிடுவார் என்று நினைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமையில் இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி தற்சமயம் செந்தில்நாதன் வகித்து வந்த இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பதவியை பிடுங்க வைத்து விட்டார். இதே போல் தனக்கு எதிராக இருக்கும் பலரையும் பழிவாங்க காத்திருக்கிறார் என்கின்றனர் அம்மாவட்ட அதிமுகவினர். 

 

இப்படியே அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்பட்டால் கரூர் அமராவதி ஆற்றிலேயே அதிமுகவை புதைத்து விட்டு அவருடைய அறக்கட்டளையை அமோக வளர்ப்பார் என்ற தகவலே கரூர் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் ஒரே பேச்சாக உள்ளது என்கின்றனர் அதிமுகவினர். 

 

மாவட்டத்தில் அதிமுகவில் நடக்கும் விஷயங்கள் குறித்து பரமத்தி ஒன்றியம் தென்னிலை கிளைச் செயலாளர் குழந்தைவேல் நம்மிடம், செந்தில்பாலாஜி இருந்தபோதும் கட்சிக்குள் அடித்துக்கொண்டார்கள். விஜயபாஸ்கர் இப்போது இருக்கும்போதும் அடித்துக்கொள்கிறார்கள். நாங்கள் ஓட்டு இவர்களுக்காக போடவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்காக போடுகிறோம். இவர்களை அடக்கும் ஆளுமை உள்ளவர்கள் வந்தால்தான் இந்தப் பிரச்சனைகள் தீரும் என்றார். 

 

 


 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்