Skip to main content

கட்சியினர் வலியுறுத்தல்... வேலூரில் மீண்டும் ஏ.சி.சண்முகம் போட்டி???

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

 

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வர அவருக்கு ஒரு வாரத்திற்கும் மேலானது. தனக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களிடம் அதிமுக இன்னும் கொஞ்சம் வேலை பார்த்திருக்கலாம் என்று சொல்லி வருகிறாராம்.

 

AC-Shanmugam



இந்த நிலையில் புதிய நீதி கட்சியின் நிர்வாகிகள் ஏ.சி.சண்முகத்தை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என முதலமைச்சசர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. 


 

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் பெற்றீர்கள். இப்ப அந்த ஓட்டுகள் கொஞ்சமும் நமக்கு குறைய வில்லை. ஆகையால் அடுத்த எம்எல்ஏ, எம்பி தேர்தல் வரைக்கும் காத்திருக்க வேண்டாம். உள்ளாட்சித் தேர்தலில் மேயர் வேட்பாளராக களம் இறங்குவோம். அதிமுகவும் இதற்கு ஒப்புக்கொள்ளும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


 

 

அதற்கு ஏ.சி.சண்முகம், நாடாளுமன்றத்திற்கு போவதுதான் எனது விருப்பம். அதோட் இந்த ஆட்சியில உள்ளாட்சித் தேர்தலெல்லாம் நடக்குமா? என்று தெரிவிக்க, எம்பியை விட பவர் புல்லான பதவி மேயர் பதவி. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை வேலூர் மாநாகராட்சி மேயர் பதவியில் இருக்கலாம். உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை என்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் வேலூரில் போட்டியிடுவோம். 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாம் உழைத்த உழைப்பு வீண்போகக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து இதுகுறித்து அதிமுக தலைமையிடம், நீங்களே பேசுங்கள் என்று கூறியிருக்கிறாராம். 

 

 

 

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.