Skip to main content

"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்

Published on 06/05/2021 | Edited on 07/05/2021

 

ugfugfug

 

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று (06/05/2021) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 74. 

 

பாண்டுவின் இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் எம்.பியுமான விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "இழப்புகள் நேரிடும் தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு. நம்மை என்றும் சிரிக்க வைத்த நடிகர் பாண்டு அவர்கள் இன்று நம்மைக் கலங்க வைத்துள்ளார். அவரது இழப்பால் துயரில் வாடும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்