Skip to main content

“உலகின் ஆகச்சிறந்த அறிவாளி; அண்ணன் “நீல சட்டை” மாறன் அவர்களுக்கு...”- விஜய்சேதுபதி பட இயக்குனர் சவால்! 

Published on 03/10/2020 | Edited on 03/10/2020
blue sattai maaran

 

 

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் க/பெ. ரணசிங்கம் படம் நேற்று ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க, ரங்கராஜ் பாண்டேவும் நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் விருமாண்டி இயக்கியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் படத்தின் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

அதில், “உலகின் ஆகச்சிறந்த அறிவாளி அண்ணன் “நீல சட்டை” மாறன் அவர்களுக்கு,

 

நாங்கள் எடுத்துக்கொண்ட கதை என்ன என்பதை புரிந்து கொள்ளும் பேராற்றல் படைத்த மகா விஞ்ஞானியான தங்களுக்கு நாங்கள் திரைக்கதையாகவும், காட்சியாகவும் என்ன சொல்லியிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தங்களின் “பெருமூளை மழுங்கி மட்டையாகி” போனது கண்டு மிகவும் வேதனையடைந்தோம்.

 

ஒரு பெண் தன் கணவன் மீது எவ்வளவு பெருங்காதல் கொண்டிருப்பாள் என்பதை ஒருசில வார்த்தைகளால் உங்களைப்போல அதிமேதாவித்தனமாக பேசிப்புரியவைக்க முடியாமல், சில காதல் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு உணர வைக்க முயன்றதற்கு வருந்துகிறோம். மேலும் காதல் காட்சிகளின் ஊடே கதாநாயகன் என்ன காரணத்திற்காக நீரோட்டம் பார்க்கும் வேலையை செய்யும் விதமாக காட்சியமைத்திருக்கிறோம் என்பதும் உங்கள் “கனமான தலையில்”ஏன் ஏறவில்லை என்று புரியவில்லை. 

 

அண்ணன் அவர்களே வேலைவாய்பின்மை, வறுமை போன்று அரசுகளால் தீர்க்க முடியாத சிக்கல்களை முன்னிட்டே பல நம் இந்திய சொந்தங்கள் அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள். 

 

இங்கு ஏன் வேலை இல்லை? எதனால் இல்லை? யாரால் இல்லை? என்று சற்று விரிவாகவே நாங்கள் பேசியுள்ளதை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டு படம் பார்க்கும்போது “குறட்டை விட்டு தூங்கியுள்ளீர்கள்” என்பதை ரணசிங்கம் திரைப்படத்தை விமர்சனம் செய்து தாங்கள் வெளியிட்டுள்ள காணொலியில் சோர்வடைந்து இருக்கும் உங்கள் முகம் மூலம் உணர முடிகிறது” என்று தெரிவித்திருந்தனர்.

 

மேலும் அந்த அறிக்கையில் க/பெ ரணசிங்கம் படத்தின் இயக்குனர், எழுத்தாளர் இருவரும், தைரியம் இருந்தால் நேரலை விவதாம் செய்யலாமா என்று மாறனுக்கு சவால் விட்டிருக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை மாறன்...? வெளியான புகைப்படமும் விளக்கமும்

Published on 20/03/2022 | Edited on 20/03/2022

 

Blue shirt Maran attacked ...? Photo released!

 

பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பான விளக்கத்தை ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ளார்.

 

அண்மையில் வெளியான அஜித்தின் 'வலிமை' படம் குறித்து பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தார். இதற்கு முன்பே அஜித்தின் திரைப்படங்கள் குறித்த ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சமூக வலைதளங்களில் மாறனுக்கு எதிராக அவரது ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

 

Blue shirt Maran attacked ...? Photo released!

 

அஜித் படம் மட்டுமில்லாது வெளியாகும் அனைத்து படங்கள் குறித்தும் அவருக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்து வந்தார். இயக்குநர் பாண்டியராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்கள் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் குறித்து பல்வேறு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். வலிமை திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வைத்த விமர்சனங்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் சமூக வலைத்தளங்களில் ப்ளூ சட்டை மாறனுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதற்கிடையே ப்ளூ சட்டை மாறன் பிவிஆர் திரையரங்கில் தாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ''பிவிஆர்ல என்னடா ஆகும்? தியேட்டர்னா நாலு பேரு பார்க்க வருவாங்க. முடிஞ்சதும் வெளியே போவாங்க. அதை மறைஞ்சு நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேரில் வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான. இதை ஷேர் பண்ற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ... வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி'' என ப்ளூ சட்டை மாறன் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

 

 

Next Story

"என்னால் நம்பவே முடியவில்லை" - 'ஆண்டி இண்டியன்' படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கருத்து 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

director bharathiraja talk about anti indian movie

 

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விமர்சகர் என அறியப்பட்ட புளூ சட்டை மாறன் என்பவர் ‘ஆன்டி இண்டியன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் ஆதம்பாவா. படம் முழுமையடைந்த பிறகு சென்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்குத் தடை விதித்தனர். அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி மூலம் படத்தின் தடை நீங்கி வரும் 10ஆம் தேதி ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

 

ad

 

இந்நிலையில், 'ஆன்டி இண்டியன்' படத்தின் ப்ரிவியூ காட்சியைப் பார்த்த இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், பாக்யராஜ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

 

இப்படம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், “எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நீ இந்தப் படத்தை இயக்கியது என்னால் நம்பவே முடியவில்லை. இதுவரை நீ விமர்சித்த படங்களுக்குத் தகுதியானவன் என நிரூபித்துக் காட்டிருக்கிறாய். படம் நன்றாக இருந்தது, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.