Skip to main content

ஹைதராபாத் வெள்ளம்... கோடிகளில் கொட்டிக் கொடுக்கும் ஹீரோக்கள்! 

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

flood

 

தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத் மற்றும் இன்னும் சில மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் ரூ.5,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

வியாபாரிகள், தொழிலதிபர்கள், பெரிய நிறுவனங்கள் எனப் பலரும் இதற்காக முன்வந்து உதவ வேண்டும் என முதல்வர் சந்திரசேகர் ராவ் கோரிக்கை வைத்திருந்தார். முதல்வர் நிவாரண நிதிக்குப் பணமளிக்க அவர் கேட்டுக் கொண்டார்.

 

இந்நிலையில், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண உதவிகளுக்காக நன்கொடை அளித்து வருகின்றனர்.

 

நடிகர் பிரபாஸ் ரூ.1.50 கோடியும், நடிகர் சிரஞ்சீவி, நடிகர் மகேஷ் பாபு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோர் தலா ரூ.1 கோடியும், நடிகர்கள் நாகார்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் தலா ரூ.50 லட்சமும், நடிகர் விஜய் தேவரகொண்டா ரூ.10 லட்சமும் முதல்வர் நிவாரண நிதிக்குப் பங்காற்றியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்