Skip to main content

சூர்யா இல்லாமல் தொடங்கிய 'சூர்யா 40' படப்பிடிப்பு!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

suriya

 

'சூரரைப் போற்று' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, தற்காலிகமாக 'சூர்யா 40' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இமான் இசையமைக்கிறார்.

 

முழுவீச்சில் நடைபெற்று வந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து, படத்தின் படப்பிடிப்பைப் படக்குழு இன்று (15.02.2021) தொடங்கியுள்ளது. இதற்கான பூஜை நிகழ்வில் இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான், நடிகை பிரியங்கா மோகன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த சூர்யா, சில தினங்களுக்கு முன்னரே வீடு திரும்பியுள்ளதால் தன்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறார். தனிமைக்காலத்தை நிறைவு செய்துவிட்டு, விரைவில் நடிகர் சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அதுவரை பிற நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கப் படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்