Skip to main content

'தெலுங்கு பட உலகுக்கு நன்றி' - ஸ்ரீரெட்டி உருக்கம்! 

Published on 26/06/2018 | Edited on 26/06/2018
sri reddy

 

 

 

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் நடிகர் நானி மீது பாலியல் புகார் அளித்து திரையுலகை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில் ஏற்கனவே ஸ்ரீரெட்டி மீது தெலுங்கு நடிகர் சங்கம் தடை விதித்திருந்தது. பின்னர் மகளிர் ஆணையம் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக நோட்டீஸ் அனுப்பியதால், அவர் மீதான தடை உடனே நீக்கப்பட்டது. இதனால் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை ஸ்ரீரெட்டிக்கு விரைவில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்கள் ஆகியும் தெலுங்கு நடிகர் சங்கம் இவருக்கு உறுப்பினர் அட்டை கொடுக்காமல் நிறுத்தி வைத்த காரணத்தினால் நடிகை ஸ்ரீரெட்டிக்கு தற்போது நடிக்க படங்கள் இல்லை.

 

 

 

மேலும் இவர் ஏற்கனவே பெரிய தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதால் மற்ற பட அதிபர்களும் தங்கள் படங்களில் ஸ்ரீரெட்டியை ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். பெரிய நடிகர்களும் தங்கள் படங்களில் ஸ்ரீரெட்டி நடிப்பதை விரும்பவில்லை. பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது படத்தில் ஸ்ரீரெட்டியை நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் அவரும் தற்போது கண்டுகொள்ளவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக ஸ்ரீரெட்டிக்கு வருமானம் இல்லை. அன்றாட வாழ்க்கை செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி இதுகுறித்து பேசியபோது.... "நான் செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். சினிமாவிலும் எனக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டனர். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தெலுங்கு பட உலகுக்கு நன்றி" என்று உருக்கமாக கூறியுள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்