Skip to main content

"அனைவருக்கும் ஷோபனா போன்ற ஒரு தோழி தேவை" - செல்வராகவன் கருத்து

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

selvaraghavan tweet about dhanush thiruchitrambalam

 

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குடும்பம், காமெடி, காதல் உள்ளிட்டவை கலந்து ஒரு கமர்ஷியல் படமாக வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்குநர் செல்வராகவன் பார்த்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திருச்சிற்றம்பலம் படம் பார்த்தேன். என்ன ஒரு அழகான படம். இப்படி ஒரு ஃபீல் குட் படத்தைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. பாரதிராஜா சார், பிரகாஷ்ராஜ் சார், நித்யா மேனன் மற்றும் தனுஷ் ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்" என பதிவிட்டுள்ளார். 

 

மேலும் "அனைவருக்கும் ஷோபனா போன்ற ஒரு தோழி தேவை" என குறிப்பிட்டு அனிருத், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் மித்ரன் ஜவஹர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் செல்வராகவன் பாராட்டியுள்ளார் . 

 

 

 

சார்ந்த செய்திகள்