Skip to main content

நான் கர்ப்பமாக இருந்தது தெரிந்தும் என்னை தவறாக அணுகினர்- சமீரா ரெட்டி

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

தமிழில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமான சமீரா ரெட்டி, நடுநிசி நாய்கள், அசல், வெடி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் அக்‌ஷய் வர்தே என்ற தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டார். நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
 

sameera reddy

 

 

தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் சமீரா ரெட்டி நான் கர்ப்பமாக இருந்தது தெரிந்தும் என்னை படுக்கைக்கு அழைத்ததாக பரப்பு புகார் ஒரு பேட்டியில் அளித்துள்ளார். 
 

இது குறித்து அவர் பேட்டியில், “சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகள் ஒருபோதும் இருந்தது இல்லை. என்னை பல தடவை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட படுக்கைக்கு அழைத்தனர். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன. இந்த நிலைமை மாற வேண்டும். ஆனால் அது மெதுவாகத்தான் நடக்கும்” என்று கூறியுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்