Skip to main content

"அதுவும் நல்லது தான்" - விஜய்யின் திரைப்பயணம் குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

sa chandrasekhar about vijay in  Karumegangal Kalaigindrana audio launch

 

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, யோகி பாபு மற்றும் கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'. இப்படத்தில் அதிதி பாலன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வீரசக்தி தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பாடல்களுக்கு வைரமுத்து வரிகள் எழுதுகிறார். 

 

இப்படத்தின் முதல் பாடல் 'செவ்வந்தி பூவே' லிரிக் வீடியோ கடந்த 5ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், கவுதம் மேனன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில் அவரது திரை பயணத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் பாரதிராஜாவை பற்றியும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். 

 

மேலும் விஜய்யின் திரை பயணம் குறித்து சில நிகழ்வுகளைச் சொன்னார். அவர் பேசுகையில், "நான் திரைத்துறைக்கு வந்து 50, 60 படம் டைரக்ட் பண்ணின சமயம். அப்போது விஜய்யை நான் அறிமுகம் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. மாறாக நம்மை விட பெரிய இயக்குநர் விஜய்யை அறிமுகப்படுத்தினால் நல்லா இருக்குமே என நினைத்தேன். அதனால் விஜய் பற்றி ஒரு ஆல்பம் ரெடி பண்ணிவிட்டு முதலில் சென்ற இடம் பாரதிராஜா அலுவலகம்.

 

அவரிடம் ஆல்பத்தை காட்டினேன். அவர், 'ஏன்யா... நீயே பெரிய டைரக்டர் ஆச்சே.. நீ பண்ணுயா' என்று சொல்லிவிட்டார். அவர் பண்ணமாட்டேன் என்பதை மறைமுகமாகச் சொன்னார். ஆரம்பக் காலகட்டத்தில் நல்ல இயக்குநர்கள் எல்லாம் விஜய்யை வைத்து படம் எடுக்கவில்லை. அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். அதன் பிறகு என் கையில் வந்ததனால் தான் விஜய் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக ஆனார். அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.