Skip to main content

"எனக்கும் வருத்தமா இருந்துச்சு" - ரசிகரின் மறைவுக்கு ரஜினி இரங்கல்

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 

rajinikanth condolences his fan muthumani

 

இந்திய சினிமாவில் நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்துக்கு முதல் முதலில் ஏ.பி முத்துமணி என்பவர் மதுரையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏ.பி முத்துமணி சமீபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு ரஜினி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் ஏ.பி முத்துமணி குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அந்த உரையாடலில் ஏ.பி முத்துமணியின் மறைவு எனக்கும் வருத்தமா இருந்துச்சு...கவலைப்படாதீங்க என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்