Skip to main content

கஜா புயலால் பாதிப்பு...ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
producer council

 

 

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு  கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நன்கொடை வழங்க தீர்மானிக்க பட்டது . அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சேர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக நன்கொடை அளிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும், திரைப்படக் கூட்டமைப்பிலிருந்து பலரும் தங்களால் இயன்ற அளவில் நன்கொடை அளித்து வருகிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் திரை உலகிர்காகவும் , சமூக நலத்திற்காகவும் எப்போதும் குரல் கொடுத்து வருகிறது. அந்தவகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சிறந்த முறையில் தேவையான உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்