Skip to main content

பாகுபலி பிரபாஸின் அடுத்த பட ரிலீஸ் டேட் இதுதான்?

Published on 08/03/2019 | Edited on 08/03/2019
prabhus


பாகுபலி என்னும் பிரமாண்ட படத்திற்கு பின்பு பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. பாகுபலி கொடுத்த பிரமாண்ட வெற்றிக்கும், பிரபலத்திற்கும் பின் இது ரிலீஸாக இருப்பதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருக்கிறது. பாலிவுட்டில் பிரபல நாயகியான ஷ்ரத்தா கபூர், இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  ‘ரன் ராஜா ரன்’ படத்தை இயக்கிய  சுஜீத்தான் இந்த படத்தை இயக்குகிறார். இப்படமும் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படுகிறது. ஷங்ஜர் இஷான் லாய்  ஆகியோர் படத்திற்கு இசை அமைக்கின்றனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 
 

கடந்த மார்ச் 3ஆம் தேதி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஷ்ரதா கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு ஷேட்ஸ் ஆப் ஷாஹோ சாப்டர் 2 என்று வீடியோ ரிலீஸ் செய்தார்கள். இதற்கு முன்பு பிரபாஸ் பிறந்தநாளுக்கு வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்திருந்தது படக்குழு. தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பார் பிலிம்ஸ் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாக தெரிகிறது. மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 

பாகுபலி இரண்டாம் பாகத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் பிரபாஸுக்கு வெளியாக இருக்கும் முதல் படம் என்பதால் பலரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''வெள்ளிக்கிழமை தமிழ் மக்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு'' - பாகுபலி பிரபாஸ்  

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள 'சாஹோ' படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் நடிகர் பிரபாஸ் கலந்துகொண்டு பேசும்போது... 

 

prabhas

 

 

''பாகுபலிக்கு பிறகு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் 'சாஹோ' இயக்குனர் சுஜீத் என்னை விடவில்லை. அதுபோக இந்த படமும் என் இரண்டரை வருடங்களை எடுத்துக்கொண்டது. ஏனென்றால் இந்த படத்தின் காட்சிப்படுத்தல் அப்படி. அதற்கு இரண்டரை வருடங்கள் தேவைபட்டது. இல்லையென்றால் படம் இந்த அளவுக்கு மிக பிரமாண்டமாக வெளிவந்திருக்காது. இந்த படம் உலகம் முழுக்க உள்ள பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. அது நம் கண்களுக்கு கண்டிப்பாக விருந்து படைக்கும். எனக்கு நேரடி தமிழ் படங்கள் பண்ண ஆசை. அது கூடிய விரைவில் நடக்கும் என நம்புகிறேன். தமிழ் ரசிகர்களுக்காக வரும் வெள்ளியன்று ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறத" என்றார்.

 

 

Next Story

''அவர் கார் ஏறும் வரை கூட வந்து வழி அனுப்புவார்'' - அருண் விஜய்  

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் நடிகர் அருண் விஜய் கலந்துகொண்டு பேசும்போது... 

 

arun vijay

 

பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் போன்ற ஒரு நடிகர் இந்த மாதிரி மாதிரியான படத்தை தேர்வு செய்ததற்கு ஒரு தைரியம் வேண்டும். அதுவும் இயக்குனர் சுஜீத் மேல் இவர் வைத்த நம்பிக்கைக்கு ஹேட்ஸ் ஆஃப். இரண்டரை வருடத்திற்கு பிறகு வரும் படம் என்பதால் பிரபாஸ் மிகவும் கவனமாக இருந்தார். அவர் நினைத்திருந்தால் எவ்வளவோ பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் இந்தப்படத்தை அவர் பெரிதும் நம்பியிருக்கிறார். அவர் சாதாரணமாக நடந்து போகக்கூடிய ஒரு ஷாட்டிற்கு அவ்வளவு மெனக்கெடுவார். அந்த அளவு அவர் சினிமா மேலும், நடிப்பு மேலும் பற்று உள்ளவர். இன்னும் சொல்லப்போனால் பிரபாஸ் எந்த அளவு பணிவானவர் என்றால் அவருடன் பணிபுரியும் எந்த ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும் அவர்கள் கார் ஏறும் வரை உடன் சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுதான் செல்வார். அந்த அளவு அக்கறையானவர். இதுபோல் ஒருவருடன் பணிபுரிந்து சந்தோஷமாக உள்ளது. 

 

 

இப்படத்தில் எனக்கு நிறைய சவால்கள் இருந்தது. குறிப்பாக ஹிந்தி பேசி நடிப்பதில் சிரமப்பட்டேன். இருந்தும் ஒரு பண்டிட் உதவியுடன் நன்றாக ஹிந்தி பேசியுள்ளேன். ஒருமுறை என் ஹிந்தி வசன உச்சரிப்பை பார்த்து உடன் நடித்த மந்திரா பேடி என்னை வெகுவாக பாராட்டினார். ஆனால் நானோ அதை மனப்பாடம் செய்து ஒப்பித்தேன் என உண்மையை சொன்னேன். அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். இருந்தும் எனக்கு வேறொருவர் தான் ஹிந்திக்கு குரல் கொடுத்துள்ளார். எனக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது'' என்றார்.