Skip to main content

“தியேட்டரில் மது விற்பனை செய்தால் கூட்டம் வருமா?”- கீர்த்தி சுரேஷ் பட இயக்குனர் சர்ச்சை பதிவு!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

nagh


’எவடே சுப்ரமணியம்’ படத்தைத் தொடர்ந்து, பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'மகாநடி' என்ற படத்தை இயக்கினார் நாக் அஸ்வின். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கொண்டாடப்பட்டது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தது பலரையும் கவர்ந்தது. இந்தக் கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
 


இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாக் அஸ்வின் இந்திய முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருமாறினார். அடுத்து, பிரபாஸின் 21 வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் பிரம்மாண்ட படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் மட்டும் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதற்கு நாக் அஸ்வின் தனது யோசனையை ட்விட்டரில் தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். அது என்னவென்றால், “ஒருமுறை சுரேஷ்பாபு மற்றும் ராணா இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தபோது, வெளிநாடுகளைப் போல தியேட்டர்களில் பீர், மது விற்பதற்கு உரிமம் கொடுக்கப்பட்டால் அது கூட்டத்தை அதிகப்படுத்துமா என்ற பேச்சு வந்தது. அதன் மூலம் திரையரங்கத் தொழிலைக் காப்பாற்ற இயலுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இது நல்ல யோசனையா? அல்லது தவறான யோசனையா?" என்று தெரிவித்தார்.
 


இந்த ட்வீட்டிற்கு கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. இதன்பின் நாக் அஸ்வின், “முற்றிலும் உண்மை. அது ஃபேமிலி ஆடியன்ஸை தியேட்டருக்கு வருவதைத் தடுக்கும். ஒரு சில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வேண்டுமானால் அனுமதிக்க முடியும். ஆனால் அது தீர்வு கிடையாது. மக்களை மீண்டும் வரவைப்பதற்கும், பார்வையாளர்களை அதிகரிக்கவும் தியேட்டர்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள். தியேட்டர்கள் திறந்தவுடனேயே நீங்கள் படம் பார்க்கச் செல்வீர்களா? அல்லது சில வாரங்கள் காத்திருப்பீர்களா?" என்று தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நாக் அஸ்வின்.


சார்ந்த செய்திகள்

Next Story

“இதுவரை எந்த நடிகையும் நடிக்காத கதாபாத்திரம்”- இயக்குனர் நாக் அஸ்வின்... 

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
nag ashwin

 

'பாகுபலி' இந்தியளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து பிரபாஸின் மார்க்கெட் இந்தியா முழுவதும் விரிவடைந்தது. அதைப் பயன்படுத்தி யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'சாஹோ' படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, கடந்த வருடம் வெளியானது. ஆனால், அந்தப் படம் எடுக்கப்பட்ட பட்ஜெட்டிற்கு ஏற்ற வசூலை ஈட்டவில்லை. 


இதனைத் தொடர்ந்து பிரபாஸின் 20ஆவது படத்தையும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. அண்மையில்தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதனுடன் இப்படத்தின் பெயர் 'ராதே ஷ்யாம்' என்று வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கே.கே. ராதா கிருஷ்ணா இயக்குகிறார். 

 

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்க இருக்கும் பிரபாஸின் 21ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஃபிப்ரவரி மாதம் வெளியானது. தெலுங்கு சினிமாத் துறையில் மிகப் பிரபலமான மற்றும் பழமையான தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ். இந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் 50ஆவது ஆண்டாகும். இதை முன்னிட்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தைத் தாங்கள் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மிகப்பெரிய பட்ஜெட்டில் நாக் அஷ்வினை வைத்து படம் இயக்கப்போகிறோம் என்று படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

'எவடே சுப்ரமணியம்', 'மஹாநடி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நாக் அஸ்வின். இவரது மனைவி ப்ரியங்கா தத் தான் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனர் அஸ்வினி தத்தின் மகள். இவர்கள் தான் 'மஹாநடி' படத்தையும் தயாரித்திருந்தார்.

 

இந்நிலையில் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. இப்படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் தீபிகா ஒப்பந்தம் குறித்து கூறுகையில், “இந்த கதாபாத்திரத்தில் தீபிகாவின் நடிப்பைக் காண மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். இது வரை எந்த நடிகையும் நடிக்காத ஒரு கதாபாத்திரம் இது. இது அனைவருக்கும் ஒரு ஆச்சரியமாக இருக்கும். தீபிகா மற்றும் பிரபாஸ் ஜோடி படத்துக்கும், கதைக்கும் மிகப்பெரிய சிறப்பம்சமாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு விஷயமாக இது இருக்கும் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

மீண்டும் ஒரு பிரம்மாண்ட படம்... பிரபல இயக்குனருடன் இணைந்த பிரபாஸ்...

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

பாகுபலி இந்தியளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து பிரபாஸின் மார்க்கெட் இந்தியா முழுவதும் வேறு ஒரு தளத்திற்கு சென்றது. அதை பயன்படுத்தி யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாஹோ படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, கடந்த வருடம் வெளியானது. ஆனால், அந்த படம் எடுக்கப்பட்ட பட்ஜெட்டிற்கு ஏற்ற வசூலை ஈட்டவில்லை. 
 

prabhas

 

 

இதனை தொடர்ந்து பிரபாஸின் 20வது படத்தையும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. பிரபாஸ் 20 என்று அழைக்கப்படும் இந்த படத்தை கே கே ராதா கிருஷ்ணா இயக்குகிறார். 

இந்த படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்க இருக்கும் பிரபாஸின் 21வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாத் துறையில் மிகப் பிரபலமான மற்றும் பழமையான தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ், தெலுங்கு சினிமாத் துறையில் அந்த நிறுவனத்தின் 50ஆவது ஆண்டாகும். இதை முன்னிட்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தை தாங்கள் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மிகப்பெரிய பட்ஜெட்டில் நாக் அஷ்வினை வைத்து படம் இயக்கப்போகிறோம் என்று படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'எவடே சுப்ரமணியம்', 'மஹாநடி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நாக் அஷ்வின். இவரது மனைவி ப்ரியங்கா தத் தான் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனர் அஸ்வினி தத்தின் மகள். இவர்கள் தான் 'மஹாநடி' படத்தையும் தயாரித்திருந்தனர்.