Skip to main content

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து 'குரூப்' சாதனை!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

kurup movie with a gross of Rs 50 crore

 

இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் ‘குரூப்’ என்ற படத்தில் நடித்திருந்தார். டோவினோ தாமஸ், அனுபமா பரமேஸ்வரன், மாயா மேனன் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கேரளாவில் 1980களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்திய அளவில் போலீசாரால் இன்றளவும் தேடப்பட்டுவரும் குற்றவாளியுமான குரூப் என்பவரின் கதையை மையமாக வைத்து ‘குரூப்’ எடுக்கப்பட்டது. கடந்த 12ஆம் தேதி தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

 

ad

 

இந்நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘குரூப்’ திரைப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘குரூப்’ திரைப்படம், முதல் வாரத்தில் ரூ. 43.35 கோடி வசூல் செய்துள்ளது. இது துல்கர் சல்மானின் முந்தைய படங்களின் வசூலைவிட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” - நொறுங்கிப் போன துல்கர் சல்மான்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Dulquer Salmaan condemn about Spanish couple attack

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியர், இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். முதலில் பாகிஸ்தான் சென்ற அவர்கள், பின்பு பங்களாதேஷ் சென்று, நேபாள் செல்வதற்கு ஜார்க்கண்ட் வழியாக சென்றுள்ளனர். அப்போது  ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து தும்கா மாவட்டத்தில் உள்ள குறுமுகத் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு அந்த தம்பதியர், இரவில் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து தங்கியிருந்தனர்.

கடந்த 1ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்து, கணவரை அடித்து தாக்கிவிட்டு, அந்த இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைதளத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.  

இதையடுத்து தம்பதியினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீதமுள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் துல்கர் சல்மான், “இதைக் கேட்டு நொறுங்கிப் போனேன். நீங்கள் இருவரும் சமீபத்தில் கோட்டயத்திற்குச் சென்றிருந்தீர்கள், அங்கு நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு உணவளித்தனர். இது யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” என அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாலிவுட் நடிகை மற்றும் அரசியல் ஆர்வலரான ரிச்சா சதா, “வெட்கக்கேடானது. இந்தியர்கள் தங்கள் சொந்தப் பெண்களை நடத்துவது போல் வெளிநாட்டினரை நடத்துகிறார்கள். நமது அழுகிய சமூகத்தைப் பார்த்தால் அவமானமாக இருக்கிறது” என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story

கமலுடன் இணைந்த முன்னணி பிரபலங்கள் - எகிறும் எதிர்பார்ப்பு

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

kamal 234 casting update

 

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் கமலின் 233வது படமாக உருவாகிறது. இதையடுத்து தனது 234வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே மகேஷ் நாராயணன், பா. ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.

 

இதில் மணிரத்னம் படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். இசைப்பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளார். மேலும் துல்கர் சல்மானும் இப்படத்தில் இணைந்துள்ளார்.  கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இசைப்பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார். அதோடு தற்போது ஜெயம் ரவியும் இணைந்துள்ளார். 

 

ஏற்கனவே மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதையடுத்து தற்போது முன்னணி பிரபலங்கள் இணைந்து வருவதால் தற்போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.