Skip to main content

தாய்லாந்துக்கு கிளம்பிய கார்த்தி, ஜெயம் ரவி... விரைவில் பொன்னியின் செல்வன்?

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக எடுக்க இருக்கிறார். இந்த படத்திற்காக கடந்த ஒரு வருடமாக முதற்கட்ட வேலைகள் செய்து வருகிறார்.  லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் இந்தப் படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

maniratnam

 

 

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, லால் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அண்மையில்தான் கீர்த்தி சுரேஷும், பார்த்திபனும் இந்த படத்தில் நடிப்பதிலிருந்து விலகிவிட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தோட்டா தரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

முன்னரே தொடங்கியிருக்க வேண்டிய படப்பிடிப்பு, சில பிரச்சினைகள் காரணமாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், முதற்கட்டப் படப்பிடிப்புக்காக ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். நாளை இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்