Skip to main content

"நாங்கள் உங்களுக்கு எப்போதும் கடன்பட்டிருக்கிறோம்" - நடிகை கஜோல் புகழ்ச்சி!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021
gdgdsg

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள இந்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. தற்போதைய சூழலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் உணவு தூக்கமின்றி போராடி வருகின்றனர். இதற்கிடையே ஜூலை 1ஆம் தேதியான இன்று தேசிய டாக்டர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

 

இந்த டாக்டர் தினத்தை முன்னிட்டு பல்வேறு திரைபிரபலங்கள் கரோனாவிற்கு எதிராக போராடிவரும் பல்வேறு டாக்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஜோல் டாக்டர்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "தினமும் நீங்கள் இந்த தேசத்திற்கு சேவை செய்ய உங்கள் அன்புக்குரியவர்களை விட்டுவிட்டு சொல்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு எப்போதும் கடன்பட்டிருக்கிறோம். நன்றி" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்வி அறிவு இல்லாத அரசியல் தலைவர்கள்” - கஜோலின் கருத்துக்கு எம்பி ரியாக்சன்

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

kajol political leaders comment issue

 

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஜோல். தமிழில் 'மின்சாரக் கனவு', 'வேலையில்லா பட்டதாரி 2' படங்களில் நடித்துள்ள கஜோல் அண்மையில் இந்தியில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெப் தொடரில் நடித்திருந்தார். இப்போது 'தி ட்ரையல்' என்ற தலைப்பில் ஒரு தொடரில் நடித்து வருகிறார். 

 

இத்தொடர் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதால் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், அரசியல்வாதிகள் குறித்து ஒரு கருத்தை முன்வைத்தார். "இந்தியா போன்ற நாட்டில் மாற்றம் என்பது மிக மிக மெதுவாகத் தான் நடக்கிறது. ஏனென்றால் நாம் நமது பாரம்பரியம் மற்றும் சிந்தனை செயல்முறைகளில் மூழ்கியுள்ளோம், நிச்சயமாக இது கல்வியுடன் தொடர்புடையது. கல்வி அறிவு இல்லாத ஒரு பின்னணியில் தான் நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் உள்ளனர்.

 

மன்னிக்கவும். இதை நான் வெளியில் சொல்லித்தான் ஆகவேண்டும். நான் தலைவர்களால் ஆளப்படுகிறேன். அவர்களில் பலர், கண்ணோட்டம் இல்லாதவர்கள். அதனால் கல்வி தான் அவர்களுக்கு தரும் என்று நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் வித்தியாசமான கண்ணோட்டத்தைக் கவனிக்கும் வாய்ப்பையாவது பெறுவார்கள்" என்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்ப பின்பு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக, "நான் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கருத்தை மட்டுமே கூறினேன். எனது நோக்கம் எந்த அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்துவது அல்ல; நாட்டை சரியான பாதையில் வழி நடத்தும் சில சிறந்த தலைவர்களும் நம்மிடம் உள்ளனர்" எனப் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் கஜோலின் கருத்து குறித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் அபிஷேக் சிங்வி, "கஜோல், நாட்டில் உள்ள படிக்காத தலைவர்களைப் பற்றி அவர் பேசும்போது எந்த ஒரு பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் பாஜ்பாய்கள் மட்டும் ஏன் இப்படி வருத்தப்படுகிறார்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


 

Next Story

ப்ரொமோஷனுக்காக எடுத்த யுக்தி - ரசிகர்களை ஏமாற்றிய கஜோல்

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

kajol takes breaks from social media is a promotion of his next project

 

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஜோல். தமிழில் 'மின்சார கனவு', 'வேலையில்லா பட்டதாரி 2' படங்களில் நடித்துள்ள கஜோல் தற்போது 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி வைரலான நிலையில் வருகிற 29 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

 

தனது படங்களின் அப்டேட் மற்றும் தனது பொழுதுபோக்குகளை ட்விட்டரில் பகிர்ந்து வந்த கஜோல் இன்று காலை, "வாழ்க்கையின் கடினமான பிரச்சனைகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு விலகுவதாக தெரிவித்திருந்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில் சிலர் அவரின் அடுத்த படத்தின் ப்ரொமோஷன் எனவும் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர். 

 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் கூறி வந்தது போல் அவர் அடுத்து நடித்து வரும் வெப் தொடரை ப்ரொமோஷன் செய்வதற்கு இப்படி ஒரு யுக்தியை கையில் எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தி ட்ரையல்' என்ற தலைப்பில் ஒரு தொடர் நடித்துள்ளதாகவும், அதன் ட்ரைலர் வருகிற 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இத்தொடர் ஆங்கிலத்தில் வெளியான 'தி குட் வைப்' தொடரின் இந்திய ரீமேக்காகும். இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள நிலையில் அந்த கதாபாத்திரத்தை பற்றி தான் தன்னுடைய முந்தைய பதிவில் பதிவிட்டுள்ளார்.