Skip to main content

'காலா' குடை சண்டையும் என் தந்தையைப் பார்த்துதான் எடுத்தார்கள்! - ஜவஹர் நாடார்

Published on 10/06/2018 | Edited on 12/06/2018

'காலா' திரைப்படத்தில் மும்பை தாராவி பகுதியில் வாழும் தமிழர்களின் பாதுகாவலராக, தலைவராக இருக்கும் ஒருவராக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். படத்தில் அவரது பெயர், கரிகாலன் (எ) காலா. காலா சேட் என மக்களால் அன்பாக அழைக்கப்படுபவர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே, மும்பையில் வாழ்ந்த திரவிய நாடாரின் மகள் விஜயலக்ஷ்மி, "இது என் தந்தையின் கதை. எங்கள் அனுமதியில்லாமல் எடுக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

 

rajini thiraviya nadar



தற்போது படம் வெளியாகியிருக்கும் நிலையில், திரவிய நாடாரின் மகன் ஜவஹர் நாடார் என்பவர், " 'காலா' படத்தில் இடம் பெற்றிருக்கும் பல விஷயங்கள் எங்கள் தந்தையின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆனால், அவரது பெயரை எங்கும் குறிப்பிடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துவிட்டனர்" என்று ரஞ்சித் மீதும் வுண்டர்பார் நிறுவனம் மீதும் குற்றம் சாட்டி, சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

 


தன் தந்தை வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ள 'காலா' விஷயங்கள்:

'காலா சேட்' என்ற பெயரே தன் தந்தை திரவிய நாடாரின் நிறத்தை வைத்து மும்பைக்காரர்கள் அவரை அன்பாக அழைத்த பெயர் என்கிறார். அவர் வெல்லம் விற்கும் தொழில் செய்ததால் 'கூடுவாலா சேட்' என்றும் அழைக்கப்பட்டாராம்.

 

 

thiraviya nadar family

 

kaala family



'காலா' படத்தில் காட்டப்படும் காமராஜர் நினைவு பள்ளி, தனது தந்தையால் 60களில் கட்டப்பட்ட பள்ளி என்றும் அந்தப் பள்ளியை படத்தில் வைத்தவர்கள் அவரது பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாதது தவறு என்கிறார்.

படத்தில் ரஜினிகாந்த் அணியும் உடை பாணியும் தனது தந்தையைப் போன்று இருக்கிறது, ஒரே ஒரு வித்தியாசம் அவர் எப்பொழுதும் வெள்ளை நிறம் அணிவாராம்.

'காலா' படத்தில் இடைவேளையை ஒட்டி வரும் குடை சண்டைக் காட்சி அதிகம் பேசப்படுகிறது. திரவிய நாடாரும் எப்பொழுதும் குடையுடன்தான் இருப்பாராம். வெயிலென்றாலும் மழையென்றாலும் அவர் கையில் குடை இருக்குமாம்.

 

kaala umbrella fight



காலாவிடம் தாராவியே அடங்கி இருந்தாலும், அவர் தன் மனைவியிடம் அடங்கிப் போவது போல படத்தில் உள்ளது. ஈஸ்வரி ராவ் நடித்த அந்தப் பாத்திரம், முற்றிலும் தன் அம்மாவை நினைவு படுத்துவதாகக் கூறுகிறார் ஜவஹர். தனது தந்தையும் தாய்க்கு மிகுந்த மரியாதை கொடுத்ததாகவும் தனது தாய் அவரிடம் 'குழந்தைகள் வளர்கின்றன. பொது வேலைகள், சண்டைகளையெல்லாம் குறைத்துக்கொள்ளுங்கள்' என்று அடிக்கடி கூறிவந்ததாகவும் கூறுகிறார் அவர்.

 

 


"என் தந்தை மறைந்த பொழுது தாராவியின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. தாராவி மக்கள் அனைவரும் வந்து குவிந்து மரியாதை செலுத்தினர். என்னிடம் ஒவ்வொருவரும் அவர்களுக்கு என் தந்தை உதவியதை பகிர்ந்து கொண்டனர். அவர்களது பிரச்சனையை என் தந்தை தீர்த்து வைத்ததைக் கூறி அழுதனர். இப்படி, அவரது வாழ்க்கையிலிருந்து இத்தனை விஷயங்களை எடுத்து படமாக்கிவிட்டு அவரது பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாமல் இருப்பது மோசமான செயல். எங்களுக்கு பணம் தேவையில்லை. ஆனால், ரஞ்சித் தாராவியில் வந்து அங்குள்ளவர்களிடம் விசாரித்து, ஆராய்ந்துதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார், அவருக்கு என் தந்தை பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை" என்கிறார்.          

 

    

மும்பையைக் கலக்கிய 3 தமிழ் டான்கள்!

 

 

                    

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியபோக்கே காரணம்” - பா.ரஞ்சித் காட்டம்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Pa. Ranjith condemned the Tamil Nadu government in the illegal liquor

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 36 ஆக உயர்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே  முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“தீபக் ராஜா கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது” - ஹிப் ஹாப் ஆதி

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Hip Hop Adhi said I know nothing about Deepak Raja case

திருச்சி மாரிஸ் எல்.ஏ.  திரையரங்கில் நேற்று(26.5.2024) ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த பி.டி. சார் திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படத்தின் இடைவேளையில் தோன்றிய படத்தின் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி, ரசிகர்களிடம் இந்த திரைப்படத்தை வெற்றி அடையச் செய்ததற்கு தனது நன்றியை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். திரையரங்கில் ஹிப் ஹாப் பாடலை ஆதி பாட, ரசிகர்களும் அவருடன் இணைந்து பாடினர்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஹிப் ஹாப் ஆதி, “படத்தை வெற்றி அடையச் செய்த அனைவருக்கும் நன்றி. இரவு காட்சி திருச்சியில் 800 இருக்கைகளுக்கு மேல் கொண்ட இந்த திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் கூட்டமாக வந்து படத்தை பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இங்கு வந்தபோது ரசிகர்கள் எங்களை வரவேற்ற விதம் எங்களது களைப்பை போக்கிவிட்டது. இத்தகைய ரசிகர்கள் எனக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. நான் கொடுத்து வைத்தவன். சில யூடியூப்களில் இத்திரைப்படத்தை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவதை பற்றி எனக்கு கவலை இல்லை. அது அவர்களின் கருத்து. திரையரங்குகளில் இந்த படத்தின்  வெற்றியை நீங்களே பார்க்கின்றீர்கள். அப்படி எதுவும் குறை இருந்தால் அதை அடுத்தடுத்த படங்களில் நிவர்த்தி செய்வேன். தொடர்ந்து நல்ல படைப்புகளை தருவேன் நடிகர்,  இசையமைப்பாளர், ஹிப் ஹாப் பாடகர் என என்னை அனைத்து பரிமாணங்களிலும் பார்க்கலாம். நான் கலைஞனாக சமுதாய கருத்துள்ள படைப்புகளை கொடுக்கவே விருப்பப்படுவேன்” என்றார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த ஆதியிடம், நெல்லையில் தீபக் ராஜா கொல்லப்பட்டதற்கு பா.ரஞ்சித்தின் கருத்து குறித்து நீங்கள் என்னை நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு,  ஆணவக் கொலையா? என்று கேட்ட ஆதி, எனக்கு இந்த கொலையைப் பற்றி எதுவும் தெரியாது; முதலில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்கிறேன். தெரியாததைப் பற்றி எப்படி கருத்துசொல்ல முடியும். ஆணவக் கொலைக்கு என்றைக்கும் நான் எதிரானவன்; நான் மட்டுமல்ல இங்க இருக்க எல்லாரும் ஆணவக் கொலைக்கு எதிரானவர்கள்தான் என பதிலளித்தார்.

மேலும், “ஆணவக் கொலைக்கு எதிராக நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஹிப் ஹாப் பாடல் எழுதியுள்ளேன்” என கூறி அப்பாடலில் சில வரிகளை பாடிக் காட்டினார்.