Skip to main content

வேலை நிறுத்தம் எதிரொலி - தள்ளிப்போகும் 'ஜெயிலர்'!

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

jailer movie shoot postponed

 

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார்.

 

இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்களான நிலையில் படப்பிடிப்பை படக்குழு தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனத்தால் ஜெயிலர் படத்தின் கதையில் நெல்சன் அதீத கவனம் செலுத்தி வருவதால் படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது. தன்னை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நெல்சன் ஜெயிலர் படத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து, ரஜினியின் கதாபாத்திரத்தை கூடுதல் மெருகேற்றி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதனிடையே ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெறவிருந்தது. அதற்காக அங்கு பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடி வெளியீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி தெலுங்கு திரையுலகினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு  பணிகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்