Skip to main content

'அறை வாங்க தயாராக இருங்கள்' - தமிழ் இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி ஆவேசம்!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
sri reddy

 

 

 

தெலுங்கு பட உலகினரை தொடர்ந்து தற்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறிவருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் போலீஸ் விசாரணை நடத்தினால் என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் கூறி வருகிறார். இதற்கிடையே இயக்குநர் வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக புகார் அளித்தார். நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபடுவதாகவும் விபச்சாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது சமூகவலைத்தளத்தில் இயக்குநர் வாராகியின் புகார் குறித்து பதிவிட்டுள்ளார். அதில்... "வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க நீங்கள் தகுதியானவர். என்னைப்போல் ஒரு பாதிக்கப்பட்டவரை இப்படி மரியாதை இல்லாமல் பேசுவதற்கு பதிலாக நீங்கள் என்னுடைய......" என்று தரைகுறைவாக பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்