Skip to main content

"தளபதி 67 இல்லனா தளபதி 77 பண்றேன்" - விஜய்க்கு கதை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி மகிழ்ச்சி!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

"I make thalapathy 67 or thalapathy 77" - RJ Balaji told the story to Vijay

 

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான ஆர்.ஜே.பாலாஜி 'எல்.கே.ஜி', 'மூக்குத்தி அம்மன்' உள்ளிட்ட படங்களில் நடித்து கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியில் வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கான 'வீட்ல விசேஷம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கியுள்ள இப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக குடும்ப ரசிகர்கள் இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றியுள்ளனர்.

 

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி, விஜய்யிடம் ஒரு கதை கூறியுள்ளார். இதனை 'வீட்ல விசேஷம்' படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். 'வீட்ல விசேஷம்' படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழு இன்று சக்சஸ் மீட் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், " இந்த வருடம் ஜனவரி மாதம் விஜய் சாருக்கு கதை சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையில் இது ஒரு பெரிய வாய்ப்பு. இரண்டு மாதம் கதை ரெடி பண்ணி 40 நிமிடம் அவரிடம் இந்த கதையைப் பற்றிய ஒரு ஒன் லைன் சொல்ல முடிந்தது. நான் சொன்ன ஒன் லைன் அவருக்குப் பிடித்திருந்தது. 

 

அதைத் தொடர்ந்து, அவர் என்னிடம் 'நான் உங்க ஸ்டைலில் ஒரு குடும்ப காமெடி படமாக எதிர்பார்த்தேன், இது ரொம்ப பெருசா இருக்கே. எவ்ளோ டைம் ஆகும் கதை எழுத' எனக் கேட்டார். ஒரு வருடம் ஆகும் சார் எனச் சொன்னேன். ஒரு வருஷமா எனக் கேட்டார். ஆமா சார், நாங்கள் தற்போது 'வீட்ல விசேஷம்' என்ற ஒரு ரீமேக் படத்தை எடுத்து வருகிறோம். அந்த படத்தின் கதையை எழுத ஐந்து மாதம் ஆனது. உங்களைப் போன்ற பெரிய ஸ்டாரை வைத்து எடுக்கும் போது கண்டிப்பா ஒரு வருடம் தேவை படும். அது நான், நீங்கள் மற்றும் பார்ப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிடிக்கணும். அந்த நோக்கத்தோடு எழுதுவதற்குக் கண்டிப்பா ஒரு வருடம் தேவை படும் எனக் கூறினேன். உடனே விஜய் சார், இது மட்டும் இல்லப்பா எதுவேனாலும், எப்பவேணாலும் வந்து சொல்லு என கூறினார். எந்த அவசரமும் இல்ல சார், 'தளபதி 67' இல்லனா 'தளபதி 77' அல்லது 'தளபதி 87' பண்றேன் எனச் சொன்னேன்' என்று விஜய்யுடன் நடந்த நிகழ்வை ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.