Skip to main content

ஒன் மோர் கேட்ட இயக்குநரை மீம் போட்டு கலாய்த்த பிரபலம்

Published on 18/03/2022 | Edited on 18/03/2022

 

director RathnaKumar and Lyricist Vivek tweets goes viral

 

மன்ஜோய் பீதா இயக்கத்தில் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படத்தில் நடித்து வரும் சந்தானம் அடுத்ததாக இயக்குநர் ரத்னகுமார் இயக்கும் 'குலுகுலு' படத்தில் நடிக்கவுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான மேயாத மான், ஆடை ஆகிய இருபடங்களும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்த நிலையில், தற்போது சந்தானத்துடன் இவர் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் 'குலுகுலு' படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் பாடல் எழுதவுள்ளார். எம்.ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் விவேக் எழுதியிருந்த மேகமோ அவள் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

 

இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று(17.3.2022) வெளியான நிலையில் பாடலாசிரியர் விவேக் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை ரீட்வீட் செய்த படத்தின் இயக்குநர் ரத்னகுமார்,"மேகமோ அவள் என்ற பாடல் 'குலுகுலு' படத்திலும் கிடைக்குமா எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பாடலாசிரியர் விவேக்," யாருகிட்ட கேக்குற அண்ணன்கிட்ட தான கேக்குற கேளு.." என்ற தோரணையில் இருக்கும் மீம்ஸை பகிர்ந்து கலாய்த்துள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்