Skip to main content

"என்னால் நம்பவே முடியவில்லை" - 'ஆண்டி இண்டியன்' படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கருத்து 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

director bharathiraja talk about anti indian movie

 

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விமர்சகர் என அறியப்பட்ட புளூ சட்டை மாறன் என்பவர் ‘ஆன்டி இண்டியன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் ஆதம்பாவா. படம் முழுமையடைந்த பிறகு சென்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்குத் தடை விதித்தனர். அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி மூலம் படத்தின் தடை நீங்கி வரும் 10ஆம் தேதி ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

 

ad

 

இந்நிலையில், 'ஆன்டி இண்டியன்' படத்தின் ப்ரிவியூ காட்சியைப் பார்த்த இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், பாக்யராஜ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

 

இப்படம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், “எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நீ இந்தப் படத்தை இயக்கியது என்னால் நம்பவே முடியவில்லை. இதுவரை நீ விமர்சித்த படங்களுக்குத் தகுதியானவன் என நிரூபித்துக் காட்டிருக்கிறாய். படம் நன்றாக இருந்தது, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாக்கப்பட்டாரா ப்ளூ சட்டை மாறன்...? வெளியான புகைப்படமும் விளக்கமும்

Published on 20/03/2022 | Edited on 20/03/2022

 

Blue shirt Maran attacked ...? Photo released!

 

பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பான விளக்கத்தை ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ளார்.

 

அண்மையில் வெளியான அஜித்தின் 'வலிமை' படம் குறித்து பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தார். இதற்கு முன்பே அஜித்தின் திரைப்படங்கள் குறித்த ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சமூக வலைதளங்களில் மாறனுக்கு எதிராக அவரது ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

 

Blue shirt Maran attacked ...? Photo released!

 

அஜித் படம் மட்டுமில்லாது வெளியாகும் அனைத்து படங்கள் குறித்தும் அவருக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்து வந்தார். இயக்குநர் பாண்டியராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்கள் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் குறித்து பல்வேறு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். வலிமை திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வைத்த விமர்சனங்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் சமூக வலைத்தளங்களில் ப்ளூ சட்டை மாறனுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதற்கிடையே ப்ளூ சட்டை மாறன் பிவிஆர் திரையரங்கில் தாக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ''பிவிஆர்ல என்னடா ஆகும்? தியேட்டர்னா நாலு பேரு பார்க்க வருவாங்க. முடிஞ்சதும் வெளியே போவாங்க. அதை மறைஞ்சு நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேரில் வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான. இதை ஷேர் பண்ற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ... வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி'' என ப்ளூ சட்டை மாறன் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

 

 

Next Story

புளூசட்டை மாறனின் படத்துக்கு சென்சார் கிடைக்குமா? கோர்ட்டில் சரமாரியான கேள்வி!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

Will the  Blue Shirt  Maran get censored for 'Anti Indian' movie?

 

‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். 

 

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விமர்சகர் என அறியப்பட்ட புளூ சட்டை மாறன் என்பவர் ஆன்டி இண்டியன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் ஆதம்பாவா. படம் முழுமையடைந்த பிறகு சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்குத் தடை விதித்தனர். இதனை எதிர்த்து பெங்களூரில் இருக்கும் ரிவைசிங் கமிட்டிக்குப் படத்தை கொண்டு சென்றார் ஆதம்பாவா. தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஏற்புடையதில்லை என்றும், கருத்து சுதந்திரத்திற்கு எதிராக சென்சார் குழுவினர் இயங்குவதாகவும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ரிவைசிங் கமிட்டியிடம் விரிவாக எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. 

 

படத்தைப் பார்த்த 10 பேர்கள் கொண்ட ரிவைசிங் கமிட்டியினர், “மிகவும் துணிச்சலான பல காட்சிகளை எதார்த்தமாக வைத்திருக்கிறீர்கள். படம் நன்றாக இருக்கிறது. ஆனால், சில விசயங்களை காம்ப்ரமைஸ் பண்ணினால் படத்தை ரிலீஸ் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது” என்று சொன்னார்கள்.

 

"குறிப்பாக, மத ஒற்றுமையைச் சீர்குலைக்கிற மாதிரி டைட்டில் இருப்பதால் அதனை முதலில் மாற்றுங்கள்;  கபாலின்னு ஒரு கேரக்டரைப் பற்றி படத்தில் பேசப்படுகிறது. கபாலின்னா, அது நடிகர் ரஜினியை குறிப்பதாகத் தெரிகிறது. அந்த பெயரை மாற்றுங்கள்” என்பது உள்பட சில விசயங்களை சொன்னது ரிவைசிங் கமிட்டி. இதற்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து, “கபாலிங்கிறது குறிப்பிட்ட எவரையும் குறிப்பிடுவதில்லை. ரஜினிகாந்த்துக்கும் கபாலிக்கும் சம்பந்தமில்லை. அவர் நடிக்கும் கேரக்டர்கள் பெயர்தான் பல படங்களின் தலைப்பாகவே இருந்துள்ளது. அதற்காக அந்த பெயர்களை பயன்படுத்தவே கூடாது எனச் சொல்வது சரி இல்லைதானே?” என்கிற ரீதியில் வாதாடினார்கள். 

 

அதேபோல, ராஜா என்று ஒரு பெயர் வருகிறது. அது, பாஜகவில் உள்ள ராஜா என்பவரைக் குறிக்கிறது. அதனையும் மாற்றுங்கள் என்றனர். இப்படி தேவையற்ற பல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டி ரிவைசிங் கமிட்டிப் பேசியது. படத்தை வெளியிடக் கூடாது என்கிற கண்ணோட்டத்தில் ரிவைசிங் கமிட்டி இருப்பதாகத் தெரிந்தது. இதனால் அந்த படத்துக்கு ரிவைசிங் கமிட்டியிலும் சென்சார் கிடைக்கவில்லை.

 

இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தயாரிப்பாளர். அந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒரு திரைப்படத்தின் மூலம் காட்சிப்படுத்துவது அடிப்படை உரிமை. அந்த வகையில், கமிட்டி தனது தனிப்பட்டப் பார்வையை படத்தின் தயாரிப்பில் திணிக்க முடியாது. கபாலி என்ற பெயரை ஏன் பயன்படுத்தக் கூடாது? ஒரு நடிகரை குறிப்பிடுவதாக சொல்வது என்பது சரி அல்ல. முட்டாள் தனமாக இருக்கிறது. சென்சார் சர்டிஃபிகேட் கேட்டு தொடரப்பட்டுள்ள இந்த மனுவுக்கு இரண்டு வாரத்தில் கமிட்டி தனது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று சொல்லி வழக்கின் விசாரணையைச் செப்டம்பர் 17-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.